பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 147 பின்னர் திரு.அ.சீனிவாசன் தனது தொழிற் சங்கப் பொருப்புகளில் சென்னைக்கு மாற்றப்பட்டு, சென்னையில் ஹார்பர், ஆவடி டாங்க் தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம், ஆகிய துறைகளில், தொழில் நிறுவன அளவிலும், அகில இந்திய அமைப்பு வரையிலும், பொறுப்புகள் வகித்து தொழிற் சங்கத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். திரு.அ.சீனிவாசன் சென்னை டாக் லேபர் போர்டு உறுப்பினராக மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டு அந்தப் பொறுப்பில் தொழிலாளர் பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார். ஆய்வு அறிக்கை சமர்ப்பித்தல் வளர்முக நாடுகளில் இளம் தொழிலாளர்களுக்கு மறுக்கப் பட்டுள்ள வாய்ப்புகள் என்னும் தலைப்பிலும், மற்றும் இளம் தொழிலாளர்களின் பொதுப் பிரச்சனைகள் பற்றியும், உலக தொழிற் சங்க சம்மேளத்தின் சார்பில் பல்கேரிய நாட்டில் வார்னா நகரில் நடைபெற்ற சர்வ தேசத் தொழிலாளர் மகாநாட்டில் இந்தியத் தொழிலாளர்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அம் மாநாட்டில் இந்திய நாட்டின் இளம் தொழிலாளர்களின் பிரச்னைகள் பற்றிய அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை உலகத் தொழிலாளர் சம்மேளத்தின் ஆவணங்களின் பகுதியாகச் சேர்க்கப் பட்டிருக்கிறது. 1980-ம் ஆண்டுகளில் உலக தொழிற் சங்க சம்மேளமும், சமாதானம் மற்றும் சோஷலிஸம் பற்றிய பிரச்னைகளும் என்னும் சர்வதேச இதழும் சேர்ந்து நடத்திய கருத்தரங்கில் வளர்முக நாடுகளில் பொதுத்துறையின் பங்கும் பொதுத்துறைக்கும் தனியார் துறைக்கும் இடையிலான உறவு தொடர்புகள் பற்றிய பிரச்னைகள் பற்றி டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் திரு.அ.சீனிவாசன்