பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியரைப் பற்றி 152 இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், நாட்டின் வளர்ச்சிக்கான பாதை எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பது தொடர்ச்சியான விவாதப் பொருளாக இருந்து வந்திருக்கிறது. இதில் ஆங்கில ஐரோப்பிய சிந்தனைப் போக்குகளுக்கும் இந்திய சிந்தனைப் பொக்குகளுக்கும் இடையில் அடிப்படையான மோதல் இருந்து வந்திருக்கிறது. இந்த மோதலில் பல பெரிய அரசியல் கட்சிகளும் கூட பிளவுபட்டு உடைந்திருக்கின்றன. சுதந்திரம் அடைந்தபோது இந்திய நாடும் உடைந்து, இந்தியா, பாகிஸ்தான் பின்னர் பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் எனப்பிரிந்து பிளவுபட்டிருக்கின்றன. இந்திய நாட்டின் வெளி உறவுக் கொள்கை, இந்திய நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாடு, இந்திய மக்களின் ஒற்றுமை, நாட்டின் தற்காப்பு பலம், இந்திய நாட்டின் தொழில் வளர்ச்சி விவசாயப் பிரச்சனை, உற்பத்திப் பெருக்கம், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், கல்வி, கலாச்சார முன்னேற்றம், மக்களின் சுகாதாரம் நல்வாழ்வு பல துறைகளிலும் நாட்டின் ஒன்றிணைப்பு இந்திய மக்களின் ஆன்மீக பாரம்பரியத்தின் மேன்மை, ஒட்டுமொத்தமான அரசியல், பொருளாதார, சமுதாய, கலாச்சார, ஆன்மீக வளர்ச்சி பற்றிய பலவேறு பிரச்னைகளும் எழுந்து அவைகளுக்குச் சரியான தீர்வு காண்பதில் இந்திய மக்களிடையில் நூறாண்டு காலத்திய ஆங்கிலக் கல்வி மூலம் ஏற்பட்ட மேலைநாட்டு சிந்தனைப் போக்குகளும், இந்திய பாரம்பரியத்தின் தொடர்ச்சியான இந்திய சிந்தனைப் போக்குகளும் எழுந்து அவை மோதியிருக்கின்றன. இன்னும் அது தொடர்கிறது. திரு. அ. சீனிவாசன் தன்னுடைய ஐம்பது ஆண்டு காலத்திற்கு மேலான பொது வாழ்க்கை, பத்திரிகைப் பணிகள், தொழிற்சங்க இயக்கப் பணிகள், விவசாயிகளின் போராட்ட