பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 53 என்பதனுள் வையகம் முழுவதும் அடங்கும். கடமையில் தவறலாகாது. தொழில்கள் எல்லாம் நற்பயன் தருமிடத்து அறங்களாகும். “பொருள் என்பது செல்வம், நிலமும், பொன்னும், கலையும் புகழும் நிறைந்திருத்தல். நல்ல மக்களைப் பெறுதல், இனப்பெருமை சேருதல் இவையெல்லாம் செல்வம். இச்செல்வத்தைச் சேர்த்தல் மனித உயிருக்கு நான் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை. “இன்பம் என்பது இனிய பொருள்களுடன் உயிர் கலந்து நிற்பன. பெண், பாட்டு, கூத்து முதலிய ரஸ் வஸ்துகளை அனுபவிப்பது, இவ்வின்பங்களெல்லாம் தமிழா! உனக்கு நன்றாக அமையும் படி பராசக்தி அருள் புரிக. உன்னுடைய நோய்கள் எல்லாம் தீர்க. உன்னுடைய வறுமை தொலைக. உனக்கு இனிமையும் அழகும் உடைய வஸ்துக்கள் எல்லாம் வசப்படுக. பஞ்ச பூதங்களும் உனக்கு வசப்படுக. நீ எப்பொழுதும் இன்பம் எய்துக. “விடாவது பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது. வீடு என்ற சொல்லுக்கு விடுதலை என்று பொருள். மேற் கூறப்பட்ட மூன்று புருஷார்த்தங்களும் ஈடேரிய பெரியோருக்கு ஈசன் தானாகவே விட்டு நிலை அருள் செய்வான் தமிழா! உனது புருஷார்த்தங்கள் கை கூடுக” என்று பாரதி கூறுகிறார். பாரதியின் இந்த உரை நடைக் குறிப்பை மீண்டும் மீண்டும் பல முறை படிப்போமாக. இதிலுள்ள ஆழ்ந்த கருத்துக்கள் அவைகளின் உள்ளடக்கம் ஆகியவைகளின் சிறப்புத் தன்மைகள் ஒரு புறமிருக்க, அதன் தமிழ் நடை, தமிழ் சொற்கள், அவர் கையாண்டுள்ள தமிழ் மொழி நடையின் ஆற்றல், வேகம், துடிப்பு கூறிய சொற்களின் ஒட்டம், அந்த சொற்களில் பொதிந்துள்ள உண்மைகள், அவை படிப்போரின் உள்ளங்களில் ஏற்படுத்தும்