பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 89. தமிழ்நாடு முதலாவது கண் விழித்தது. ஆனால் இன்னும் புத்தி சரியாகத் தெளியாமல் கண்ணை விழிப்பதும் கொட்டாவி விடுவதுமாக இருக்கிறது.” “ஒரு தேசத்தின் பொது புத்தியை அளந்து பார்க்க வேண்டுமானால் அதற்கு எத்தனையோ அறிகுறிகள் உண்டு. அந்த தேசத்து ராஜாங்க நிலை, தர்ம ஸ்தாபனங்களின் நிலை, கோவில்களின் நிலை முதலிய எத்தனையோ அடையாளங்களால் ஒரு தேசத்தின் பொது ஞானத்தை அளவிடலாம். இவற்றுள்ளே சமாச்சாரப் பத்திரிகைகளையும் ஓர் அடையாளமாகக் கருதத்தகும். ஆனால் ஐரோப்பா, அமெரிக்காக் கண்டங்களில் நடக்கும் பத்திரிகைகளுடன் தமிழ் நாட்டுப் பத்திரிகையை ஒப்பிட்டுப் பார்த்து இவற்றின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு "ஆஹா இப்படிப்பட்ட தமிழ் நாடு எங்கே, பிழைக்கப் போகிறது” என்று எண்ணிப் பாழும் நெஞ்சு உடைந்து போக வேண்டாம். ஏன் என்றால் வர்த்தமானப் பத்திரிகை நாமாக உண்டாக்கிய கருவியன்று. பிறரிடமிருந்து கற்றுக் கொண்ட தந்திரம். சென்ற முப்பது வருஷங்களாகத் தான் தெரிந்து கொண்டிருக்கிறோம். இன்னும் சரியாக முதிர்ச்சியடையவில்லை. தவிரவும் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் உதவி கிடையாது. பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் எத்தனைக்கெத்தனை மதிப்புக் கொடுக்கிறார்களோ அத்தனைக்கத்தனை நாட்டில் மதிப்பேறி அதனால் பத்திரிகைகளுக்குத் தகுந்த லாப முண்டாகும். அதிலிருந்து சரியான வித்வான்களின் கூட்டம் யதேஷ்டமாய்ச் சேர்ந்து அந்தத் தொழில் மேன்மையடைய இடமுண்டாகும். “தமிழ் நாட்டில் இப்போது நடைபெறும் ராஜாங்கம் தமிழ் பாஷையில் தேர்ச்சியுடையதன்று. தமிழ் பாஷையை முதலாக மதிப்பதன்று. “தமிழ் முழு நாகரிகமுடையதா இல்லையா”