பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. தமிழிசையைப் பற்றி 94 பழக்கப்படுத்தினால் தான் அவர்கள் கஷ்டத்திலே உவகையும் வீரமும் பிறக்கும். பாட்டிலே கலையுண்டாகும். “கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ் நாட்டில் உள்ள ஜில்லாக்களிலே ஒவ்வொன்றிலும் இக்காலத்திலும் கருவிகளிலும் வாய்ப் பாட்டிலும் புகழ் பெற்ற வித்வான்கள் பலர் இருக்கின்றனர். “காலத்தின் சீர் கேட்டாலும், சம்பிரதாய பங்கத்தினாலும், நவரசங்களுக்கும் பாட்டுக்கும் உள்ள தொடர்பை மறந்து விட்ட போதிலும் இவர்களிலே சிலர் (ஆனும், பெண்ணும்) சரஸ்வதி கடாகூடித்தினால் தம்மை அறியாமலே அற்புதமான வேலை செய்கிறார்கள். சில சமயங்களில் ஒரிரண்டு ரசங்களைத் தெரிந்தே பாட்டில் இசைக்கிறார்கள். அப்போது இவர்களுடைய பாட்டு அல்லது வாத்தியம் மிகவும் உயர்ந்த நிலையடைகிறது. ஆனால் இவர்கள் நான் முன்னிரண்டு பகுதிகளில் குறிப்பிட்ட செய்திகளையும் தயவு செய்து கவனிக்கும் பகடித்தில் தமிழ் நாட்டிற்கு இவர்கள் செய்து வரும் உபகாரம் பல மடங்கு அதிகப்படும் என்பதும், அப்படி அதிகப் பட வேண்டும் என்பதும் என்னுடைய கருத்து. அதைத் தெரிந்து கொண்டேன்” என்று பாரதி தனது உரைநடையில் பேசுகிறார். மேலும் பாரதி செம்மொழி இசையோடு சாதாரண மக்கள் பாடும் இசை வடிவங்களைப் பற்றியும் தமிழ் நாட்டின் சிறப்புச் செய்தியாகத் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். “கும்மிப்பாட்டு, பள்ளுப்பாட்டு, கிளிப்பாட்டு, நலங்குப்பாட்டு, பள்ளியறைப்பாட்டு, அம்மானைப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு முதலிய பெண்களுடைய பாட்ட்ெல்லாம் மிகவும் இன்பமான வர்ணமெட்டு. தமிழர்களின் தாய், அக்காள், தங்கை, காதலி முதலிய இவர்கள் பாடும் பாட்டு மறக்கக் கூடிய இன்பமா? ஞாபகம் இல்லையா?