பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

103



இவையே திவாகரத்தின் பத்தாம் தொகுதியாகிய ஒலி பற்றிய பெயர்த் தொகுதியிலும் உள்ளன.

இத் திவாகரம் கி.பி. 1835-ஆம் ஆண்டில் தாண்டவராய முதலியார் என்பவரால் ஓலைச் சுவடியிலிருந்து முதல் முதலாக அச்சிடப்பட்டது. இப்பதிப்பில் முதல் பத்துத் தொகுதிகள் மட்டுமே உள்ளன; இறுதித் தொகுதிகள் இரண்டும் காணப்படவில்லை. மேலும் இப்பதிப்பில் இடைச்செருகல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஒரு நூலைப் பெயர்த்தெழுதுபவரோ அல்லது அச்சிடுபவரோ, நூலின் இடையிடையே தாமாகச் சிலவற்றைச் செருகிவிடுவதற்குத்தான் இடைச்செருகல் என்று பெயராம். தாண்டவராயர் தம் கைவண்ணம் சிறிது காட்டியிருப்பார் போலும்!

தாண்டவராய முதலியாருக்குப் பின்னர் மேலும் சிலர் திவாகரத்தைப் பதிப்பித்தனர். அப் பதிப்புக்களுள் பதினொன்றாவது தொகுதியின் அகரமுறைச் சீர்திருத்தப் பதிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து ஓரளவு விளக்கினால்தான் புரியும்.

இப்போது நமக்கு ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியவில்லையென்றால் உடனே அகராதியை எடுத்துப் புரட்டுகிறோம். இக்கால அகராதிகளில் எழுத்துக்களின் வரிசை முறையில் சொற்கள் அமைக்கப்பட்டிருப்பதால் எந்தச் சொல்லையும் உடனே கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் பழைய நிகண்டுகளில் இப்படியில்லாததால் குறித்த சொல்லை உடனே தேடி எடுக்க முடியவில்லை. அதனால் திவாகரத்தில் சொல்லுக்குப் பொருள்கூறும் பகுதியாகிய பதினொன்றாவது தொகுதியில் உள்ள சொற்களை