பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

104



அகர வரிசைப்படுத்தி எழுதி வைத்துக்கொண்டு அக்காலத்தவர் சிலர் பயன்படுத்தி வந்தனர். (இது குறித்து முன்பு ஓரிடத்திலும் சொல்லப்பட்டுள்ளது.) அச்சு வசதி ஏற்பட்ட பின்னர் அகர வரிசையில் சீர்திருத்திப் பதிப்பிக்கவும் செய்தனர். ‘அகர முறைச் சீர்திருத்தப் பதிப்பு’ என்றால் இதுதான். அண்மைக் காலத்தில் அச்சிடப்பட்ட திவாகரப் பதிப்புகளில்கூட, பதினொன்றாவது தொகுதி மட்டும் அகர வரிசையில் உள்ளது. ஆனால், இந்த அகர வரிசை திவாகரர் செய்த முறையன்று; பிற்காலத்தவர் செய்து கொண்ட சீர்திருத்தமே—என்பது நினைவிருக்க வேண்டும்.

அகர வரிசைப்படுத்திய பிற்காலத்தவர்கள் பதினொன்றாவது தொகுதியை ‘ஆதியிற் பொருள்’, ‘அந்தத்துப் பொருள்’ என இரு பிரிவுகளாக அமைத்துள்ளனர். ‘ஆதியிற் பொருள்’ என்றால் என்ன என்று விளக்குவதற்கு, ஆதியிற் பொருள் பிரிவிலுள்ள முதல் பாடலையும் இறுதிப் பாடலையும் எடுத்துக் கொள்வோம்:-

[அங்கதம் என்னும் பெயர்]

“அங்கதம் தோளணி அரவு மாகும்.”

இது முதல் நூற்பா.

[வேளாண்மை என்னும் பெயர்]

“வேளாண்மை உபகாரம் ஈகையும் விளம்பும்.”

இஃது இறுதி நூற்பா.

அங்கதம் என்னும் சொல்லுக்கு, தோள் அணி, அரவு என்னும் இரண்டு பொருளாம். வேளாண்மை