பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

112



“காரே கூதிர் முன்பனி பின்பனி
சீரிள வேனில் வேனில் என்றாங்கு
இருமூன்று திறத்தது தெரிபெரும் பொழுதே”

எனக் கார்ப் பருவமே முதலில் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆவணியில் தொடங்குவதில் ஏதோ புத்தாண்டுப் பொருத்தம் இருக்கவேண்டும்! இதுகுறித்துத் தனியாக விரிவாக ஆராயவேண்டுமாதலின், ஒரு புதிய எண்ணத்தைக் கிளறிவிடும் அளவுக்கு மட்டும் ஈண்டு ஒரு சிறிது நோக்குவாம்:-

இப்போது திருநெல்வேலி மாவட்டம் என அழைக்கப்படுகின்ற தென்பாண்டி நாட்டில் சிலவிடங்களில் ஆவணித் திங்கள் புத்தாண்டுத் தொடக்கமாகப் போற்றப்படுகிறதாம். பழைய தமிழ்ச் சேர நாடாகிய மலையாளத்தின் சில பகுதிகளிலுங்கூட ஆவணியே ஆண்டின் தொடக்கமாகக் கொண்டாடப்படுகிறதாம். மலையாளப் பெருமக்கள் மிகப்பெரிய நாட்டு விழாவாகக் கொண்டாடும் ‘ஓணம் பண்டிகை’ ஆவணித் தொடக்கத்திலே நிகழ்கிறது என்பதும் ஈண்டு ஒப்புநோக்கற்பாற்று.

எனவே, ஒரு காலத்தில் தமிழகத்தில் பரவலாக ஆவணித் திங்கள் ஆண்டின் தொடக்கமாகப் போற்.றிக் கொண்டாடப்பட்டுள்ளது என உய்த்துணரலாம். கொடிய கோடை நீங்கிக் குளிர்ந்த கார்காலம் தொடங்கும் திங்களாதலின் ஆவணி அவ்வாறு போற்றப்பட்டதுபோலும்!

மற்றும், ஆவணித் திங்களை ஆண்டின் தொடக்கமாகக் கூறுவதில் தக்க பொருத்தம் இல்லாமற் போகவில்லை. மேடம், இடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்.