பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

133



[காட்டின் பெயர்]

“கடம், வியல், பழுவம், கட்சி, குறும்பொறை,
கடறு, காந்தாரம், அடவி, கான், வனம்,
ககனம், காண்டம், கட்டம், முளரி,
சுரம், அத்தம், ஆரணியம், கானம், களரி,
சீரணி, பொச்சை, விடர், தில்லம், காடே.”

[மூங்கிலின் பெயர்]

“காம்பு, திகிரி, கண், வேழம், சந்தி,
தூம்பு, முளை, வெதிர், விண்டு, வேரல்,
முந்தூழ், தட்டை, கீசகம், வேய், பணை,
அம்பு, வரை, வேணு, கழை, அமை, ஓங்கல்,
பாதிரி, கிளை, அரி, பாண்டில், உள்பட
வருபவை மூங்கில் எனவகுத் தனரே.”

மேலும் சில செய்திகளும் பெயர்களும் மிகவும் இன்பமாயுள்ளன. அவை வருமாறு:— இலையுதிர்ந்த காட்டிற்கு ‘முதையல்’ என்று பெயராம்.

“முதையல் இலையுதிர்வு பிறங்கிய முதுகாடே.”

‘கோளி’ என்னும் மரம் பூக்காது காய்க்குமாம்.

“கோளி பூவாது காய்க்கும் குளிர் மரம்.”

சண்பக மரப் பூவையும் வேங்கை மரப் பூவையும் வண்டுகள் மொய்க்காவாம்.

“சண்பகமும் வேங்கையும் வண்டுணா மலர் மரம்.”

‘செம்மல்’ என்பது பழம் பூவின் பெயராம்.

“செம்மல் பழம் பூ வாகச் செப்புவர்.”

‘பொங்கழி’ என்பது தூற்றாத நெல் கூட்டின் பெயராம்.

“பொங்கழி தூற்றா நெற்கூ டாகும்.”