பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

135



[ஆண் மரம்]

“அகக்காழ், வன்மரம் ஆண்மரம் ஆகும்;
அவை கருங்காலி முதலா யுள்ளன.”

[பெண் மரம்]

“புறக்காழ் வன்புல் பெண்மரம் ஆகும்;
அவைதாம்,
தெரிக்கில் பனை, கமுகு, தெங்கு, மூங்கில்.”

[அலி மரம்]

“முருக்கு நார் பால் மர முதலாயின
வேறு அலிமரம் எனும் விகற்பம் பெறுமே.”

இது தொடர்பான இன்னொரு கருத்தும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலது. அது வருமாறு:— மக்கள் ஆணும் பெண்ணுமாய் இணைந்து இனவளர்ச்சி செய்வது போலவே, மரஞ்செடி கொடிகளும் தத்தம் பூக்களின் வாயிலாக ஆணும் பெண்ணுமாய் இணைந்து இன வளர்ச்சி செய்கின்றன. சில செடிகளில் ஒரு பூவிலேயே ஆண் உறுப்பும் பெண்ணுறுப்பும் இணைந்து இருக்கும். இத்தகைய செடிகள் ‘இணையினப் பூஞ்செடிகள்’ எனப்படும். வேறு சிலவற்றில் —ஒரு செடியிலேயே ஆண் பூ தனியாகவும் பெண் பூ தனியாகவும் இருக்கும். இத்தகையவை ‘ஈரினப் பூஞ்செடிகள்’ எனப்படும். வேறு சிலவற்றில்—ஒரு செடியில் ஆண் பூ மட்டுந்தான் இருக்கும்; இன்னொரு செடியில் பெண் பூ மட்டுந்தான் இருக்கும். இத்தகையவை ‘ஓரினப் பூஞ்செடிகள்’ எனப்படும். காற்றின் உதவியாலும் வண்டின் வாயிலாகவும் ஆண் பூவில் உள்ள மகரந்தத்தூள் பெண் பூவில் கலக்கக் கருவுற்றுக் காய்காக்கும். இதுதான் மரஞ்செடி கொடிகளின்