பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

138



ஆகிய மலைகள் பேசப்பட்டுள்ளன. ஆறுகளுள் காவிரியாறு (சோழநாடு), பொருநை எனப்படும் தாமிரவர்ணியாறு—குமரி எனப்படும் கன்னியாறு (கன்னியாகுமரிப் பகுதி)—வையையாறு (பாண்டிய நாடு), ஆனிவானி எனப்படும் ஆன் பொருநையாறு (சேரநாடு), பாலாறு (தொண்டைநாடு), கெளதமையாறு, கோதாவிரி ஆகிய ஆறுகள் கூறப்பட்டுள்ளன. நகரங்களுள், சிதம்பரம்—திருவாரூர்—காவிரிப் பூம்பட்டினம் — உறையூர் (சோழநாடு), மதுரை (பாண்டியநாடு), கருவூர் என்னும் வஞ்சி (சேரநாடு); கச்சி என்னும் காஞ்சிபுரம் (தொண்டைநாடு) அவந்தி—காசி—மிதிலை—அயோத்தி—அரித்துவாரம் (வடநாடு) ஆகிய நகரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதினின்று, திவாகரர் காலத்தில், மேற்கூறப்பட்டுள்ள மலைகளும் ஆறுகளும் நகரங்களுமே தமிழ் மக்களிடத்தில் மிக்க செல்வாக்குப் பெற்றிருந்தன என்பது புலனாகும். மேலும், இன்று பர்மா எனப்படும் கடாரமும் (சிலர் சுமத்ராவைக் கடாரம் என்கின்றனர்), இன்று சிலோன் என்று அழைக்கப்படும் ஈழமும், மேற்கூறப்பட்டுள்ள இந்தியப் பகுதிகளோடு இணைத்துத் திவாகரம் முதலிய நிகண்டுகளில் பேசப்பட்டிருப்பதை ஆராயப் புகுந்தால் அது ஒரு பெரிய அரசியல் சிக்கலாகுமாதலின் அதனை விடுப்பாம். அடுத்து, புலியூர், தில்லை என்னும் பெயர்கள் சிதம்பரத்திற்கு உரிய பெயர்கள் என்று சூடாமணி நிகண்டில் காணக்கிடக்கவும், திவாகர நிகண்டில் “மன்றம் சிதம்பரம்” என்று பாடப்பட்டிருப்பது மிக்க இன்பமாயுள்ளது. அந்த ஊருக்குச் சிதம்பரம் என்னும் வடமொழிப் பெயருக்குப் பதிலாக ‘மன்றம்’ என்னும் செந்தமிப் பெயர் ஒரு காலத்தில் வழங்கப்பட்டது என்பதை எண்ணும்போது