பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

141



கல்வியூரி, கல்லூரி என்னும் இரண்டு சிறந்த பெயர்களும் உள்ளமை கண்டு வியக்க!

“அங்கணம் தூம்புவாய் சலதாரை யாகும்.”

“கல்வியூரி கல்லூரி யாகும்.”

இறுதியாகக் கழகம் என்னும் சொல்லைப் பற்றிச் சிறிது ஆய்வாம்: கல்லூரிக்கும் மேற்பட்ட பெரிய கல்வி நிலையத்தைப் ‘பல்கலைக்கழகம்’ என இன்று அழைக்கிறோம். கழகம் என்னும் இந்த இனிய பெயரை, பல துறைகளில் பலர் கூடிப் பணியாற்றும் பல வகை நிறுவனங்களும் பெற்றுள்ளன. ஆனால், கழகம் என்றால் ‘சூது ஆடும் இடம்’ என்னும் பொருளில், திருக்குறளில் ‘சூது’ என்னும் தலைப்பில்,

“கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.”

“பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.”

என்னும் இரு குறள்கள் காணப்படுகின்றன. ‘கழகமும் கையும் சூதாடும் கருவியுமாக இருப்பவர் ஒன்றும் இல்லாதவராகிவிடுவர்’, ‘கழகத்தில் புகுந்தவர் செல்வமும் பண்பும் அற்று விடுவர்’-என்பன மேலுள்ள குறட் கருத்துக்கள். சூதாடுகளம் என்னும் பொருளில் கழகம் என்னும் சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருப்பது சிலரைத் தியங்கி மயங்கச் செய்துள்ளது. கழகம் என்னும் சொல்லை எழுத்து எழுத்தாக—அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து உடைத்துச் சொல்லாராய்ச்சி செய்பவரும் உண்டு. இதற்காக இவ்வளவு மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டியதில்லை. இது மிகவும் எளிதில் அவிழ்க்கக் கூடிய சிக்கலேயாகும். இதற்குத் திவாகர