பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

154



பிறப்பு, இளமை, நிலையாமை, உரிமை, ஆக்கம், தூய்மை, வளமை, உறவு, துறவு, மணம், இனிமை, கசப்பு, புளிப்பு, உறைப்பு, அளவைகள், ஒப்புமை முதலிய பண்புகளுக்குரிய பல்வகைப் பெயர்கள் மிகவும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

பெருமை என்னும் பண்பைக் குறிக்க முப்பத்தொன்பது பெயர்களும், மிகுதியைக் குறிக்க இருபத்துமூன்று பெயர்களும், வலிமைக்கு முப்பத்திரண்டு பெயர்களும், அச்சத்திற்கு நாற்பத்திரண்டும், விருப்புக்கு இருபத்தைந்தும், துன்பத்திற்கு நாற்பத்தேழும், குற்றத்திற்கு இருபத்தேழும், இன்னும் பலவற்றிற்கும் பலப்பல பெயர்களும் கூறப்பட்டிருப்பதிலிருந்தே இத் தொகுதியின் விரிவு புலனாகும். மாதிரிக்காகப் பெருமையின் பெயர்களை மட்டும் காண்போம்:–

“தடம், தவவு, விபுலம், வியலிகை, வியன், விறல்,
முடலை, அகலுள், மோடு, செம்மை,
பீடு, கண், பழி, பீன், முன்பு, மால், மா,
வந்தை, கலந்தை, பரி, பணை, அழுவம்,
பிறங்கல், படு, நனி, இயக்கம், வியம், தகை,
செம்மல், அணி, நன்று, அருமை, இருமை,
கருமை, கதழ்வு, கயவு, மூரி,
பெருமை, பாடும், அண்ணலும், அதற்கே”

இனிச் சில சுவையான செய்திகளைப் பார்ப்போம்: சிலர் தம் நண்பர்க்கு மடல் (கடிதம்) எழுதும்போது, ‘உழுவல் அன்புடைய கெழுதகை நண்பரீர்!’ என்று நண்பரை விளிக்கின்றனர். இது சிலரிடத்தில் ‘சம்பிரதாயம்’ (Formality) எனப்படும் ஒருவகை மரபாகப் போய்விட்டது. இவர்களுக்குள் அன்பும் இருக்காது —பண்பும் இருக்காது; இதற்கு முன் இவர்கள் பகைவர்