பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

155



போலவும் நடந்து கொண்டிருப்பர் — அல்லது — இன்னும் சில நாளில் பகைவராகவும் மாறக்கூடும்; இருப்பினும், ஒப்புக்கு ‘உழுவல் அன்புடைய நண்பரீர்’ என அழைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் ‘உழுவல் அன்பு’ என்பதன் பொருள் புரியாமலேயே எழுதிக் கொள்கின்றனர். இன்னோர் அனைவரும் மிகவும் இரங்கத் தக்கவரே — இல்லையில்லை — எள்ளி நகையாடற்கு உரியவராவர். எனெனில் ‘உழுவல்’ என்றால், ஏழுபிறவிகள் எடுத்தாலுங்கூடத் தொடர்ந்து நீடிக்கக்கூடிய அன்பு என்று பொருளாம்.

“உழுவல் எழுமையும் தொடர்ந்த அன்பு உரைக்கும்.”

என்பது திவாகர நூற்பா, நிலைமை இங்ஙனமிருக்க, மணிக்கு மணி மனம் மாறும் பேர்வழிகள், உழுவல் அன்புடைய கெழுதகை நண்பர்களாக எப்படியிருக்க முடியும்? அடுத்து, இறுமாப்பு என்பதைக் குறிக்க ஏக்கழுத்தம் என்னும் சொல்லும், அக (மன) மலர்ச்சி என்பதற்குச் செம்மாப்பு என்ற சொல்லும், குறிப்பு என்பதற்கு நாட்டியம் என்ற சொல்லும், காரணம் என்பதற்குப் பொருட்டு, திறன், வாயில் முதலிய சொற்களும், இலாபம் என்பதற்குப் பசை, பேறு முதலிய சொற்களும் இருப்பதை எடுத்துச் சுட்டாமல் இருக்க முடியவில்லை:

“இறுமாப்பு ஏக்கழுத்தம்.”

“செம்மாப்பு அகமலர்ச்சி.”

“நாட்டியம் குறிப்பே.”

“நிபமும், பொருட்டும், ஏதுவும், நிமித்தமும்,
திறனும், வாயிலும், காரணம் தெரிசொல்.” .

10