பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

159


அடுத்து, விழாவைக் குறிக்க,

“முருகும், சாறும், சேறும், விழாவே;
உயர் துணங்கறலும், உற்சவம் ஆகும்.”

என்னும் புதுமைப் பெயர்கள் உள்ளமை, காண்க.

இப்போது நடைமுறைப் பேச்சு வழக்கில் அலங்காரம்—அலங்காரம் செய்தல் என்னும் வழக்காறே பெரும்பாலும் அடிபடுகிறது. இந்த அலங்காரத்தைக் குறிக்க எத்தனையோ இனிய அழகிய சுவையான தமிழ்ப் பெயர்கள் இருப்பதைத் தமிழ் மக்களுட் பெரும்பாலார் அறிந்தாரிலர். ஒப்பனையைக் குறிக்கும் அப்பெயர்களை ஈண்டு காண்பாம்:—

“மண்ணல், கைசெய்தல், பொற்பு, அலங்கரித்தல்,
புனைதல், மிலைதல், வேய்தல், அணிதல்;
வனைதல் ஒப்பனை மாற்ற மாகும்.”

இனி இச் சொற்களைப் பயன்படுத்தலாமே!

நாம் உலக வழக்கில் அயர்ந்த தூக்கத்தைத் தூங்குதல் என்னும் வினையால் சுட்டுகிறோம். ஆனால், தூங்கல் என்னும் சொல், நிரம்பாத தூக்கத்தையே குறிக்கும் என நிகண்டு கூறுகிறது. இதனை

“தூங்கல் நிரம்பாத் தூக்கம் என்ப.”

என்னும் திவாகர நூற்பாவால் அறியலாம். பொதுவாகத் தூக்கத்தைக் குறிப்பதற்கு,

“கண் படை, கண் வளர்தல், கனவோடு, அளந்தர்,
துஞ்சல், பள்ளி, துயிறல் ஆகும்;
உறங்கலும், படையும் உரைப்பர் அதற்கே.”

என வேறு பல பெயர்கள் உள்ளன.