பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

170



திலக்கணமும், எழுத்தாலான சொல்லிலக்கணமும், சொல்லாலான பொருள் இலக்கணமும், பொருள் அமைந்த செய்யுள் இலக்கணமும், செய்யுளோடு சேர்ந்து வரும் இசையிலக்கணமும் சொல்லப்பட்டிருப்பதில் வியப்பில்லை. பொதுவாக நிகண்டு நூலை ஒருவகை ‘மொழி நூல்’ என்று கூறலாமெனின், அதிலும் குறிப்பாக இந்த ஒலி பற்றிய பெயர்த் தொகுதியை ஒருவகை ‘மொழி விஞ்ஞானம்’ என்றே கூறிவிடலாம்.

இனி இத்தொகுதியில் உள்ள சில சிறந்த சொல்லாட்சிகளையும் கருத்து விளக்கங்களையும் கண்டு சுவைப்போம்:—

சொல்லுதல் என்பதைக் குறிக்கும் சொற்களஞ்சியம் வருமாறு:—

“விரித்தல், கதைத்தல், உரைத்தல், கூறல்,
தெரித்தல், ஆடல், நொடித்தல், நவிலல்,
சாற்றல், பணித்தல், மொழிதல், வலித்திடல்,
ஏற்ற முந்நான்கும் சொல்லுதற் கிசையும்.”

“பகர்தல், செப்பல், இயம்பல், பரவல்,
குயிறல், இறுத்தல், கூறல், புகறல்,
கட்டுரை, விளம்பல், கரைதல், ஓதல்,
சொற்றல், வழங்கல், வசனம், காதை,
பேசல், பேச்சு, கிளப்பே, அறைதல்,
இசைப்பு, தேர்தல், மீழற்றல், வாணி,
அசைப்பு, என்றின்னவை சொல்லென அறைவர்;
குயில், வினா, எதிர்ப்பு, கீர், நுவல், பாணி,
இயம், வாக்கு, என்பவும் சொல்லின்பால்.”

சொல்லைப் பற்றிய சொல் வளங்களையறிந்து வியந்தோம். மேலும் தொடருவோம்: பலமுறை