பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

173


நாட்டு ஆசிரியர்களின் கருத்துக்களையும் இழைத்துக் குழைத்துக் கூறுவதும் உண்டு. எடுத்துக்காட்டாகச் சில காண்பாம்:

(1) ‘மொழியின் வாயிலாக மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்து விளக்குவதே இலக்கியம்’ (Literature is thus fundamentally an expression of life -through the medium of language) என்று ஃஅட்சன் (Hudson) என்னும் அறிஞர் கூறியுள்ளார்.

(2) ‘தலை சிறந்த கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டதே இலக்கியம் (Literature is a record of best thoughts) என்று எமர்சன் (Emerson) கூறியுள்ளார்.

(3) ‘மக்களிடம் நற்பண்பை உருவாக்கவல்ல சிறந்த கருவிகளுள் இலக்கியமும் ஒன்று’ (Literature is one of the most powerful instruments for forming character) என்று வைகவுன்ட் மார்லி (Viscount Morley) என்னும் பெரியார் கூறியுள்ளார்.

இவ்வாறே இலக்கியம் பற்றிப் பலரும் பலவாறு கூறிச் செல்கின்றனர். இது குறித்துத் திவாகரம் கூறுவதாவது:—

“இலக்கியம்: உதாரணம், எடுத்துக்காட்டல்.”

என்பது நூற்பா. ஓர் உயர்ந்த கருத்தை—அறிவுரையை—நீதியை—படிப்பினையைத் தக்க உதாரணத்தின் வாயிலாக—எடுத்துக்காட்டின் மூலமாக விளக்குவதே இலக்கியம்; இதுதான் திவாகர நூற்பாவின் இலக்கிய விளக்கம். அந்த எடுத்துக்காட்டு