பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

183



கொட்டைகள் நீங்கிய) தசைப் பகுதிகளையும் மட்டுமே உண்டு வந்ததில் உள்ள மறைபொருள் (இரகசியம்) யாது? மக்கள் கொள்ளும் நடைமுறை உணவில் கொலைச்செயல் அடங்கியுள்ளது என்னும் உண்மையை அவர்கள் உணர்ந்தமையினாலேயே, தாமாக உதிர்ந்து மீண்டும் முளைக்காத பகுதிகளை மட்டும் உண்டு வந்தனர்.

இவ்வளவு கருத்துக்களையும் நினைவு செய்து கொள்ள, ‘அடுதல் சமைத்தலும் கோறலும் ஆகும்’ என்னும் நூற்பா உதவி செய்கிறதல்லவா? அடுப்பு, அடுக்களை (அடுப்பங்கரை), அடிசில் (உணவு) ஆகிய சொற்கள் அடுதல் என்னும் சொல்லை அடிப்படையாகக் கொண்டனவே என்பதும் ஈண்டு நினைவுகூரத்தக்கது.

அடுத்து, கடி என்னும் சொல்லுக்குப் பன்னிரண்டு பொருள்கள் கூறப்பட்டிருப்பது கருதத்தக்கது அவையாவன:

“கடியென் கிளவி, காப்பே, கூர்மை,
விரையே, விளக்கம், அச்சம், சிறப்பே,
வரைவே, மிகுதி, புதுமை, தோற்றம்,
மெய்படத் தோன்றும் பொருட்டாகும்மே;
ஐயமும், கரிப்பும், ஆகலும் உரித்தே.”

என்பது நூற்பா. இந்நிகண்டுப் பொருள்களைப் பார்த்தே இக்கால அகராதியினர் சொற்பொருள் விளக்கம் செய்துள்ளனர்.

படித்துத் தெரிந்துகொள்வது மட்டும்தான் கல்வி என்பதில்லை. கேட்டுத் தெரிந்து கொள்வதும் கல்விதான். கேள்வி என்னும் சொல்லுக்கு, கேட்கும்.