பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

184



காது என்னும் பொருளோடு கல்வி என்னும் பொருளும் திவாகரத்தில் கூறப்பட்டுள்ளது:

“கேள்வி கல்வியும் செவியும் கிளக்கும்.”

என்பது நூற்பா ‘கற்றிலனாயினும் கேட்க’ என்னும் திருக்குறள் பகுதியும், ‘கற்றல் கேட்டல் உடையார் பெரியார்’ என்னும் ஞானசம்பந்தரின் தேவாரப் பகுதியும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலன. கல்வி உளநூல் (Educational Psychology) வளர்ச்சி காலத்தில், படித்துத் தெரிந்து கொள்வதோடு, கேட்டுத் தெரிந்து கொள்ளுதல்—பார்த்துத் தெரிந்து கொள்ளுதல்—தொட்டுத் தெரிந்து கொள்ளுதல்—மோந்து தெரிந்து கொள்ளுதல்—சுவைத்துத் தெரிந்து கொள்ளுதல் ஆகிய ஐம்புலப் (Sense Training) பயிற்சியும், செய்து (Learning By Doing) தெரிந்து கொள்ளுதல் ஆகிய இயக்கப்பொறிப் (Kinaesthetic) பயிற்சியுங்கூடக் கல்வியாகக் கருதப்படுவதும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

நாம் அரசியல் (Politics) என்று சொல்கிறோமே அதைக் குறிக்கக் கொற்றம் என்னும் அழகிய தமிழ்ச் சொல்லும் அக்காலத்தில் வழங்கப்பட்டது என்பதனை

“கொற்றம் அரசியலும் வெற்றியும் ஆகும்.”

என்னும் நூற்பாவால் அறியலாம்.

பெண்கள் காதில் அணிந்து கொள்ளும் அணிகலனுக்குக் ‘கம்மல்’ என்ற பெயர் உண்டு. இதனை இக் காலத்தினர் ‘தோடு’ என அழைக்கின்றனர். இதனையே சற்று முன்காலம் வரைக்கும் ‘ஓலை’ என்று அழைத்தனர். இன்றும் சிலவிடங்களில் சிலர் ஓலை என்றே அழைக்கின்றனர். ஆயினும், தோடு என