பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

185



அழைப்பதே இன்று நாகரிகமாகக் கருதப்படுகிறது. இதனையே இலக்கியப் புலவர்கள் ‘குழை’ என அன்றும் அழைத்தனர்—இன்றும் அழைக்கின்றனர். ஓலை, குழை, தோடு என்னும் பெயர்கள் நமக்கு அறிவிக்கும் மறைபொருள் (இரகசியம்) யாது?

மிகப் பழங்காலத்து மக்கள் வெள்ளி, பொன் முதலியவற்றால் நகை செய்து காதுகளில் அணிந்து கொள்ளவில்லை. இயற்கையாகக் கிடைத்த பூக்கள், பூவிதழ்கள், தளிர்கள், தென்னையோலை–பனையோலைகள் முதலியவற்றையே காதுகளில் அணிகலன்களாகச் செருகி மகிழ்ந்தனர். இன்றும் சிலர் மலர்களைக் காதில் செருகிக் கொள்வதைக் காணலாம். இன்றும் சிலர் தென்னையோலை பனையோலைகளைச் சுருட்டிக் காதுத்துளையில் பதித்துக் கொள்வதைப் பார்க்கலாம்

இவ்வாறு மலர்களையும் இதழ்களையும் தளிர்களையும் அணிந்துவந்த மக்கள், அவை உடனுக்குடன் காய்ந்து கருகிப் போவதால் அடிக்கடி வேறு மாற்ற வேண்டியிருப்பதில் உள்ள தொல்லையை நீக்குவதற்காக, அவை போலவே நிலையாகப் பொன், வெள்ளி முதலியவற்றால் நகைகள் செய்து அணியத் தொடங்கினர். அப்போதும் சரி—இப்போதும் சரி—பழைய பெயர்களை விடவில்லை. மிக்க விலை மதிப்புடைய அந்த அணிகலன்களை ஓலை என்றும், தளிர் என்னும் பொருளுடைய குழை என்றும், இதழ்—ஓலை என்னும் பொருளுடையதோடு என்றும் இந்நாள்வரை அழைத்து வருகின்றனர். இவ்வளவு கருத்துக்களையும்