பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

189



பொருளைக் குறிக்கும் படம் என்னும் வடசொல்லுக்குத் துணி என்பது நேர்பொருள் என்றும், துணியில் எழுதப்பட்ட ஓவியம் ‘படம்’ என வடமொழியாளரால் அழைக்கப்பட்டதென்றும் சொல்லப்படுவதுண்டு. இந்தப் படம் என்னும் வடசொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்தான் கிழி என்பது. கிழியில் (துணியில்) எழுதப்படும் ஓவியம் ‘கிழி’ எனப்பட்டது.

அடுத்துக் ‘கூழ்’ என்னும் சொல் நினைக்கத்தக்கது. இச் சொல் இலக்கியங்களில் உணவு, பயிர் என்னும் பொருள்களில் வழங்கப்படுகிறது. பயிர் தானே உணவுப் பொருளாக மாறுகிறது! அதனால் இரண்டையும் கூழ் எனல் சாலும்.

“பல்வகை உணவும், பயிரும், பொன்னும்,
கொள்ப மாதோ கூழ்என் கிளவி.”

என்பது திவாகரம். ஈண்டு, பல்வகை உணவுக்கும் கூழ் என்பதே பொதுப் பெயர் என்பது பெறப்படும். ஆனால் இன்று நடைமுறை உலக வழக்கில், கூலங்களை (தானியங்களை) மாவாக்கித் துழவிய ஒரு வகைத் தடிப்பான நீருணவே கூழ் எனப்படுகிறது. இதிலிருந்து அறியக் கிடப்பதென்ன? நாகரிகம் முதிராத மிகப் பழங்காலத்து மக்கள், கூலங்களை இடித்து நசுக்கி அப்படியே துழவி உண்டார்கள்; அதுதான் அன்றைய உணவு முறை—அதுதான் அன்றைய சமையல் முறை. அந்த உணவைக் கூழ் என்று அழைத்து வந்தார்கள். பின்னர் வேறு விதமாகச் செய்யப்பட்ட உணவும் கூழ் என அழைக்கப்பட்டது, உணவு என்றால் கூழ்—கூழ் என்றால் உணவு என்ற நிலை அன்று இருந்தது. பிறகு நாளடைவில் நாகரிக முதிர்ச்சியால் புதிய முறையில்