பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

195



ஒன்று என்னும் எண்ணால் சுட்டப்படுவது (மோட்சம் எனப்படும்) வீடு பேறாம். தனக்கு இணையாக வைத்து எண்ணத் தக்கது வேறு எதுவும் இன்றித் தான் தனித்த பெருமை உடையது வீடுபேறு என்பது இதனால் புலனாகும்.

“ஒன்று என்பதுவே வீடுபேறு ஆகும்.”

என்பது திவாகர நூற்பா. உயிர் வாழ்க்கையின் ஒப்பற்ற ஒரே பயனாய் வீடுபேறு மதிக்கப்பட்டிருக்கிறது.

இருவகை அறங்களாவன: இல்லறம், துறவறம் என்னும் இரண்டுமாம்.

“இருவகை அறமே இல்லறம், துறவறம்.”

வாழ்க்கை நிலையை இல்லறம், துறவறம் என இரண்டாகத் தமிழ் நெறியாளர் வகுத்துள்ளனர். திருவள்ளுவரும் தமது திருக்குறளில் இவ்விரண்டு செறிகளையே இல்லறவியல், துறவறவியல் என்னும் பிரிவுகளின் கீழ்ப் பேசியுள்ளார். ஆனால் வடமொழி வாணரோ பிரமச்சரியம் (திருமணம் ஆகாத நிலை), கிருகத்தம் (இல்லறம்), வானப்பிரத்தம் (மனைவியுடன் காட்டில் தங்கித் தவஞ்செய்யும் நிலை), சந்நியாசம் (துறவறம்) என வாழ்க்கை நிலையை நான்காக வகுத்துள்ளனர். அதாவது, அவரவர் பழக்கவழக்க வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு நிலைகள் வகுக்கப்பட்டுள்ளன. உண்மை இப்படியிருக்க,

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.”

என்னும் திருக்குறளின் உரையாக, வடமொழிவாணரின் நான்கு நிலைகளைப் புகுத்திக் குழப்புவது