பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

198



“வேல்தானை, வாள்தானை, வில்தானே, மேலோர்
தேர்த்தானே, பரித்தானே, களிற்றுத்தானே என
ஆற்றல் சான்ற அறுவகைத் தானை.”

எனப் படையை ஆறாக நிகண்டு கூறியிருப்பது ஒரு புது மாறுதல்! விஞ்ஞானம் பெருகியுள்ள இருபதாம் நூற்றாண்டில் நிலப்படை, நீர்ப்படை, வானப்படை எனப் படைகள் மூவகைக்குள் அடங்கும். இவற்றுடன் மலைப்பயிற்சிப் படையையும் சேர்த்து இக்காலத்தும் படைகளை நால் வகையாகக் கூறலாம் போலும்! இன்னும் என்னென்ன படைகள் முளைக்க இருக்கின்றனவோ?

“படையும், குடியும், கூழும், அமைச்சும்,
அரணும், தட்பும், அரசியல் ஆறே.”

என அரசியல் உறுப்புகள் ஆறு என்று எட்டாம் நூற்றாண்டில் திவாகரம் கூறியுள்ளது. இதனை மேலும் சில நூற்றாண்டுகட்கு முன்பே,

“படைகுடி கூழ்அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.”

எனத் திருவள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ளார். இதிலிருந்து அறிய வேண்டுவது யாது? ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என்பர் இதற்கேற்ப, முன்னர்த் தோன்றியுள்ள இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டே பின்னர் நிகண்டு நூற்கள் எழுந்தன என்பது புலனாகும். நிகண்டு நூற்கள் மொழியிலக்கண நூல் வகையைச் சேர்ந்தனவன்றோ?

பத்து வகையான முதல்(மூலப்) பொருள்கொண்டு சிற்ப உருவங்கள் செய்யப்படலாம் எனத் திவாகரம் அறிவிக்கிறது: