பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

205



அறவைப் பிணஞ்சுடுதல், அறவைத் தூரியம்,
வண்ணார், நாவிதர், வதுவை, பூணூல், நோய்
மருந்து, கண்ணாடி, காதோலை, கண்மருந்து,
தலைக்கெண்ணெய், பெண்போகம், சுண்ணம், பிறர்துயர்
காத்தல், தண்ணீர்ப் பந்தர், மடம், தடாகம்,
கா, ஆவுரிஞ்சி நடுதறி, ஏறு
விடுத்தல், விலைகொடுத்துக் கொலையுயிர் மீட்டல்,
இச்செயல் முப்பத்திரண்டு அறம் என்ப.”

என்பது பாடல். இவற்றுள், இந்தக் காலத்தில் நிலைத்து நிற்கும் அறங்கள் எத்தனையோ?

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புல அறிவுகளோடு மன அறிவாகிய பகுத்தறிவையும் சேர்த்து ஆறு அறிவு உடையவர்களாக மக்களைச் சொல்வது வழக்கம். ஆனால் திவாகரரோ, மக்களையும் விலங்குகளையும் ஐந்தறிவு உடைய உயிர்களாக முதலில் கூறி, மன அறிவாகிய ஆருவது அறிவும் மக்களுக்கு உண்டு என்றும், அந்த ஆறாவது அறிவு ஒரு சில விலங்குகட்கும் உண்டு என்றும் பின்னர்க் கூறியுள்ளார்:

“உற்றறி புலன், நா, மூக்கொடு, கண், செவி,
மக்களும் மாவும் ஐந்தறி வினவே.”

“மனத்தோடு ஆறறிவினரே மக்கள்
ஒருசார் விலங்கும் அதுபெறற்கு உரித்தே.”

என்பன நூற்பாக்கள். மக்களுள் சிலர்—சிலரென்ன பலர்—பகுத்தறிவற்ற விலங்குகள்போல இந்த இருபதாம் நூற்றாண்டிலும் நடந்து கொள்கிறார்களே—இதுபோல அன்றும் நடந்திருப்பார்கள் அல்லவா?