பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

பலவகை உருவங்கள் என்றைக்கு எடுக்கத் தொடங்கியதோ அன்றைக்கே அகராதியும் ஒரு ‘கலை’யாகி விட்டது. பொதுவாக ஓர் அறிவியலோ அல்லது ஒரு தொழிலியலோ அது தோன்றிய காலத்து இருந்த நிலையினும் மேலாகக் கற்பனையால் புதுப்புது நிலையை அடையத் தொடங்குகிற போதே ‘கலை’ பிறந்து விடுகிறது. ஓர் இயல் கலையாகி வளர வளர, மக்கள் அதனால் கவரப்பட்டு, அதனைப் பல வகையில் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்தப் பொது விதிக்கு அகராதிக் கலையும் உட்பட்டதே.