பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

206



அதனால்தான், மக்களை மாக்களோடு இணைத்து ஐயறிவு உயிராகத் திவாகரர் கூறினார் போலும். விலங்குகளுள்ளும் ஆறறிவு உடையவை ஒரு சில உண்டு எனக் கூறியிருப்பதை நோக்கின், மக்கள் எவ்வளவோ உயர்ந்த பண்பு உடையவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்பது சொல்லாமல் பெறப்படும். மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே தொல்காப்பியரும் இப்படி ஒரு குறிப்புத் தந்துள்ளார்:

“மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
ஒருசார் விலங்கும் உளவென மொழிப.”

என்னும் தொல்காப்பிய நூற்பா ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.

இந்தத் தொகுதியில், அலி எனப்படும் பேடியின் இயல்புகள் பேசப்பட்டிருப்பது மிகவும் சுவையாக உள்ளது. அது வருமாறு:

“பேடி யிலக்கணம் பேசுங் காலை
நச்சுப் பேசலும், நல்லுரை யோதலும்,
அச்சு மாறி ஆண் பெண் ஆகியும்,
கைத்தலம் ஒன்றைக் கடுக வீசியும்,
மத்தகத்து ஒருகை மாண்புற வைத்தலும்,
விலங்கி மிதித்தலும், வழிவே றாகியும்,
துளங்கித் தூங்கிச் சுழன்று துணிந்தும்,
நக்கும், நாணியும், நடம்பல பயின்றும்,
பக்கம் பார்த்தும், பாங்கு திருத்தியும்,
காரண மின்றிக் கடிபல கொண்டும்,
வாரணி கொங்கையை வலிய நலிந்தும்.