பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211

211

' செங்கதிர் வரத்தால் திவாகரன் பயந்த

பிங்கல முனிவன் எனத்தன் பெயர் நிறீஇ

உரிச்சொல் கிளவி விரிக்குங் காலை ' என்னும் அடிகள் அமைந்துள்ளன. இப்பகுதியால், திவாகரன் பெற்ற பிள்ளை பிங்கலன் என்பது தெரிய வருகிறது. சேந்தன் திவாகரத்தினும் பிங்கலமே முக்தியது என்னும் கொள்கையினர் இப் பகுதியைக் கண்டதும், ஆதிதிவாகரர் பெற்ற பிள்ளையே பிங்க லர் என்று பொருள் கூறி, சேந்தன் திவாகரம் எழுதிய திவாகரர் பிங்கலர்க்குப் பிற்பட்டவரே என்று முடிவு கட்டிவிட்டனர்.

இந்தக் கருத்துப் பொருந்தாது; பிங்கலர் ஆதி திவாகரரின் மகன் அல்லர், சேந்தன் திவாகரரின் மகனே பிங்கலர். எனவே, பிங்கலம் சேந்தன் திவாகர நிகண்டுக்குப் பிந்தியதேயாகும். இதற்குரிய சான்றுகள் வருமாறு :

(1) பிற்காலத்தில் மிகுதியாகப் பயிலப்பட்ட சூடாமணி’ என்னும் நிகண்டுநூலைப் பதிருைம் நூற்ருண்டின் முற்பகுதியில் (1520) இயற்றிய மண் டல புருடர் என்னும் ஆசிரியர், நூலின் தொடக்கத்தில் பின்வருமாறு பாடியுள்ளார் :

" அங்கது போய பின்றை

அலகில்நூல் பிறந்த மற்றும் செங்கதிர் வரத்தால் தோன்றும்

திவாகரர் சிறப்பின் மிக்க பிங்கலர் உரைநூற் பாவில்

பேணினர் செய்தார் சேர இங்கிவை யிரண்டுங் கற்க

எளிதல என்று சூழ்ந்து ”