பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

254

சூடாமணி 1197 செய்யுட்கள் உடையது என்னும் கொள்கையினர் தக்க சான்று ஒன்று தர முடியும். அதாவது - சூடாமணியின் ஒவ்வொரு தொகுதியின் இறுதிப் பாடலிலும், இத்தொகுதியில் மொத்தம் இத் தனை பாடல்கள் எழுதியுள்ளேன் என்று ஆசிரியரே கணக்குக் கட்டிக் கூறியுள்ளார். அந்தக் கணக்கின் படி கூட்டிப் பார்த்தால் மொத்தம் 1197 செய்யுட்கள் வருகின்றன.

ஆல்ை, 72 செய்யுட்கள் இடைச் செருகலே என் னும் கொள்கையினர், 72 செய்யுட்களைப் புதிதாகப் பாடி இடையிடையே செருகியவர்கள் ஒவ்வொரு தொகுதியின் இறுதியிலும் ஆசிரியர் கூறியுள்ள எண்ணிக்கையையும் திருத்தி விட்டிருப்பார்கள், என்று. கூறக் கூடும்.

இவற்றுள் எது உண்மையோ, யார் அறிவார் : நூல் நடை

திவாகரமும் பிங்கலமும் நூற்பா (சூத்திர) கடை யில் இருப்பதால் படித்து நினைவில் இருத்துவதற்குக் கடினமா யுள்ளது என்று கருதித் தாம் விருத்தப் பாவால் சூடாமணியை எழுதி யிருப்பதாக ஆசிரியர் தற்சிறப்புப் பாயிரத்தில் கூறியுள்ளார். இசையுடன் படித்துச் சுவைப்பதற்கும் அந்த இசையோட்டத். துடன் செய்யுளை நினைவில் இருத்ததற்கும் விருத்தம் மிகவும் ஏற்றது என்பது அனைவரும் அறிந்த உண்மையே !

சொற்கள்

முதல் பத்துத் தொகுதிகளில் மட்டும் 11,000 சொற்கள் விளக்கம் பெற்றுள்ளன. பதினேராம்.