பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265

265

சொற்கள் அமைந்த பாடல்களையும், திவாகரத்தில் செய்தது போல், ஆதியில் பொருள் - அந்தத்துப் பொருள் என இருபிரிவாகப் பகுத்துக் கொண்டனர். இவ்வாறெல்லாம் பிற்காலத்தினர் தத்தம் கைவண் -ணம் பெய்து எளிதாக்கிக் கற்றனர்- கற்பித்தனர்.

வேதகிரியார் சூடாமணி

சூடாமணி நிகண்டின் பதினேராம் தொகுதியில் மொத்தம் 310 விருத்தப் பாக்கள் உள்ளன; அவற்றின் வாயிலாக 1575 சொற்களுக்கே பொருள் விளக்கம் செய்யப்பட்டுள்ளது; தமிழ் மொழியில் உள்ள மற்ற சொற்கள் எல்லாம் இடம் பெறவில்லை. இக்குறை போக்க, பத்தொன்பதாம் நூற்ருண்டில் வாழ்ந்த களத்துர் வேதகிரி முதலியார் என்பவர், மேலும் பல சொற்களை எதுகை முறையில் அமைத்துப் புதிதாக 290 விருத்தப் பாக்களை இயற்றிச் சூடாமணி நிகண் டின் பதினேராம் தொகுதியில் உள்ள 310 விருத்தப் பாக்களின் இடையிடையே புகுத்தி (310+290=600) மொத்தம் 600 பாக்கள் கொண்ட தனிநூலாக்கி வேதகிரியார் சூடாமணி’ என்னும் பெயரில் 1842-ஆம் ஆண்டில் வெளியிட்டார். இவ்வாறெல்லாம் சூடாமணி கிகண்டின் பதினேராம் தொகுதி பல அவதாரங்கள்’ எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

நயநப்ப முதலியார் உரை

பதினேராம் தொகுதியில் பலர் பல சீர்திருத்தங்கள்

செய்ததன்றி அதற்குமட்டும். தனியே உரை எழுதியும்

உள்ளனர். அவ்வுரைகளுள் புதுவை-கயாகப்ப முதலி யார் உரை தானும் ஒன்று என்பதோடு கில்லாமல்,