பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

302

கயாதர நிகண்டின் சில ஓலைச் சுவடிகளில் ஒரு சொல் பல் பொருளியல் என்னும் பதினேராவது இயல் காணப்படவில்லையாம். இதைக் கொண்டு, பதினே. ராவது இயல் பிற்காலத்தவரால் எழுதிச் சேர்க்கப் பட்டது எனச் சிலர் எளிதில் கூறக் கூடும். இது பொருந்தாது. பதினே ரியல்களும் அமைந்துள்ள ஒலைச் சுவடியில் பதினேராம் இயலின் இறுதியில் பின் வரும் பாடல் உள்ளது :

' அரும்பொருள் அந்தாதி சூடிய சீதரன் அம்பிகையைத்

தரும்பொருள் செய்த பரம்பரை யான்றினம் தண்டமிழோர் விரும்பிய கோவை யுரிச்சொற் பனுவல் விரித்துரைத்தான் பெரும்பொருள் கண்ட கெயாதரன் தேவைப்

பெருந்தகையே.”

பதினேராவது தொகுதியும் கயாதரத்தில் உண்டு என்பது இப்பாடலாற் புலனுகும். இதற்கு மற்றும் ஒரு சான்று உண்டு. அருமருந்தைய தேசிகர் இயற் றிய அரும்பொருள் விளக்க நிகண்டானது, ஒரு சொல்லுக்குப் பல பொருள் கூறுகின்ற பதினேராவது தொகுதியைப் பற்றியது மட்டுமே யாகும். மண்டல புருடர், காங்கேயன், இரேவணசித்தர், கயாதரர் ஆகியோர் ஒரு சொல் பல்பொருளாகக் கூறியிருப் பனவற்றைத் தொகுத்து அரும்பொருள் விளக்கம் என் னும் நூலாக உருவாக்கியதாக அதன் ஆசிரியர் பாயிரப் பாடலில் கூறியுள்ளார் :

' மாவியல் சிறக்கும் வீரை

மண்டலவன் காங்கேயன் ரேவண சித்தன் செஞ்சொற்

கயாகான் இவராற் சொற்ற