பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

பல் பொருள் சூளாமணி நிகண்டு

மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு மக்களிடையே மிகவும் பரவிய பின், நிகண்டு நூல் களைச் சூளாமணி என்னும் பெயரால் அழைக்கும் மரபு தோன்றிவிட்டது என்பது, பல் பொருள் சூளாமணி என்னும் இப்பெயரிலிருந்து தெரியவரும்.

ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் ஈசுர பாரதியார். இவர் கெல்லை மாவட் டத்தினர்; மடசை என்னும் ஊரினர்; சிதம்பரபாரதி என்பாரின் குமாரர், சைவ சமயத்தினர்; திருநெல் வேலிச் சிவனை வழிபடு கடவுளாகக் கொண்டவர். ஆசிரியர் இங்கிகண்டினைக் கொல்லம் 876-ஆம் ஆண் டில் - அதாவது கி. பி. 1700-ஆம் ஆண்டில் இயற்றி முடித்தார்; எனவே, இவரது காலம் பதினேழாம் நூற்ருண்டின் பிற்பகுதியும் பதினெட்டாம் நூற்ருண் டின் முற்பகுதியுமாகும். இவ்வளவு செய்திகளையும் ஆசிரியரே பாடிய பல் பொருள் சூளாமணியின் பாயிர ச் செய்யுட்களால் அறியலாம். அவை வருமாறு :

' கொல்ல மெண்ணுற் றெழுபத்தா றெனக்கணிதப் பாவாணர்

குறித்த வாண்டின்

மல்குபுகழ் விக்கிரம வருடத் தாவணி மூல

வளஞ்சேர் நாளில்

நெல்லைநகர் வடிவுவந்த வேய்முத்தைப் பணிந்துலகில்

நெடுநாள் நிற்கப்

பல் பொருட்சூ ளாமணியை ஈசுரபா ரதி தமிழாற்

பாடி ேைன.”