பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323

323

எதுகைப் பகுதியில் கட்டாயம் கண்டு பிடித்து விட லாம் என்ற உறுதிக்குச் சூடாமணியில் இடமில்லை. ஆனல் இங்கிகண்டிலோ, ஓர் இனத்து எதுகைச் சொற் களோடு வேறு இனத்து எதுகைச் சொல் கலக்கவே யில்லை; அதல்ை, இந்நிகண்டில் எச்சொல்லையும் அதன் எதுகைத் தொகுதியில் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

முதல் முதலில் மோட்டாரோ, சைகிளோ, இன்னும் பிற பொருள்களோ கண்டுபிடிக்கப்பட்டபோது அவற்றில் இல்லாத வசதிகள் பல பின்னர் நாளடை வில் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் பொருத்தப் பட்டன. வேறு எந்தச் சீர்திருத்தமும் இப்படித்தான் ! இவ்வியற்கை நிலையை யொட்டி, சூடாமணி நிகண் டைக் காட்டிலும் அரும் பொருள் விளக்க நிகண்டின் எதுகை அமைப்பில் சீர்திருத்தம் தோன்றியதில் வியப் பில்லை.

இனி, ஆசிரியரின் வரலாற்றுக்கும், இந்நூலின் அமைப்பு முறைக்கும் அகச்சான்ருக, ஆசிரியராலேயே இயற்றப்பட்ட இந்நூற் பாயிரப் பாடல்கள் ஆராய்ச்சி யாளர்க்கு உதவு மாதலின் அப்பாடல்க்ள் வருமாறு :

காப்பு (1) மகிழ்ந்துல கெவையும் போற்ற

வன்புரங் குன்ற வென்ற திகம்பான் அணங்கோர் பாகத்

தெய்வநா யகன்சேய் தந்தி முகன் றன தடியை ஏத்தி

மூதரும் பொருள் விளக்க நிகண்டெனு மணித்தீபத்தை

நிலமிசை நிகழ்த்த லுற்ரும்.”