பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

342

IV குணநாமப் படலம்... 4. (1) உயிர்ப் பொருள் - மனக்குண வர்க்கம் (2) உயிர்ப் பொருள் - வாக்குக் குணவர்க்கம் (3) உயிர்ப் பொருள் - செயற்குண வர்க்கம் (4) உயிரில் பொருள் குணவர்க்கம்

(மொத்த வர்க்கங்கள்...16

ஆக நான்கு படலங்களும் பதினறு வர்க்கங்க ளாகப் பகுக்கப்பட்டுள்ளன. திவாகரம் முதலிய நிகண்டுகளில் தொகுதி எனப்படுவதுதான் இந்நூலில் 'வர்க்கம்' எனப்படுகிறது. திவாகரத்தில் உள்ள முதல் பத்துத் தொகுதிகளும் இந்நூலில் கான்கு படலங்களின் கீழ்ப்பதிறுை வர்க்கங்களாகக் கொடுக் கப்பட்டிருப்பது ஒரு புது அமைப்பு அல்லவா ? ஆகக் கூடியும், பழைய சரக்கைப் புதிய கலங்களில் கொடு .ப்பது போன்றதுதான் இது !

நாமதீப நிகண்டு குறித்து இதுகாறும் கூறிய கருத்துக்களை எட்டுப் பாக்களில் தொகுத்துப் பாயிர மாக ஆசிரியர் சிவசுப்பிரமணியக் கவிராயரே இயற்றி -யுள்ளமை ஆராய்ச்சியாளர்க்கு மிகவும் உதவ வல்லது. அப்பாயிரப் பாடல்கள் வருமாறு :

“ ஆனைமுக னைக்குகனை யாதிபுவனேசொரியை

ஞானமுதல் கோரக்க நாதனையும்-மேன்மைபெறு சாமிகவி சாசனையுந் தான்வணங்கிப் பேருரைப்பன் பூமிதனில் உள்ள பொருட்கு.”

" ஒல்லும் உயர்திணைப்பே சஃறிணை யுயிர்ப்பொருட்பேர்

இல்பொருட்பே ரில்பொருள்க ளின் குணப்பேர்

சொல்படல

மாமொருநான் கிட்டிரண்டைந் தைந்துநால் வர்க்கமிட்டு நாமதீ பம்பகர்ந்தேன் நான்.'