பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

வானநூல் நிகண்டு

கணிநூல் அல்லது வானநூல் எனப்படும் வானியற் கலை (சோதிடக் கலை) பற்றிய நிகண்டுகள் பல தமிழில் இருந்தன. பெரும்பாலானவை மறைந்து போயின. இத்துறை நிகண்டின் மாதிரிக்காக, சாதக சிந்தாமணி என்னும் கணிநூல் இயற்றிய தில்லை நாயகர்' என்னும் கணிப்புலவரின் படைப்பாகிய :கால நிகண்டு', 'காரக நிகண்டு ஆகியன குறித்துச் சிறிது காண்பாம்:

கால நிகண்டு

இதில், கிழமை, திதி, நாள் (நட்சத்திரம்), யோகம் கரணம், இராசி, கோள் முதலிய காலத் தொடர்புடைய பொருட்கள் பேசப்பட்டுள்ளன. ஒவ்வொன்றையும் குறிக்க எத்தனை பெயர்கள் உண்டோ அத்தனை யும் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இந்நிகண் டினை. ஒரு பொருள் பல் பெயர்த் தொகுதி' என்னும் குரிவினதாகக் கொள்ளலாம். இங்கிகண்டின் மாதிரிக் பிகாக, அசுவிகி, பரணி, கார்த்திகை என்னும் நாட்கட், (நட்சத்திரங்கட்கு) உரிய பெயர்களைக் குறிக்கும் பாடல் வருமாறு:

(அசுவிகி-பரணி-கார்த்திகை)

  • பரிமருத் துவணுள் யாழேறு செந்நி

பகர்வாசியைப் பசி யிரலை பரிவுறு முதனுள் அசுபதி யாகும் பகலவன் ருழிமுக் கூட்டும் சரியுறு கிழவன் பூதஞ் சோறடுப்புத்

தருமநாள் பரணியே யென்பர்