பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை

உயர் திரு. பேராசிரியர். டாக்டர். மு. வரதராசனார்,
M. A., M, 0. L., Ph. D. அவர்கள்,
தமிழ்த்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம்,
சென்னை.

தமிழ் அகராதிகளின் வரலாறு பற்றிய நூல் இன்றியமையாதது ஆகும். தமிழில் அகராதிகள் பல தோன்றின ; அவற்றுள் மறைந்தவை சில ; இருப்பவை சில, எதையுமே செய்யுள் வடிவத்தில் எழுதும் வழக்கம் இருந்த காலத்தில், அகராதிகளும் அவ்வடிவத்தில் தோன்றி வளர்ந்தன ; நிகண்டுகள் எனப் பெயர் பெற்று நிலவின. அக்காலத்து அவை மனப்பாடம் செய்து நினைவில் வைத்துப் பயன்படுத்தற்கு உரிய வகையில் அமைந்தன. இன்று நூல்களை வாங்கி நூலகந்தோறும் வீடுதோறும் அடுக்கி வைத்துத் தேவையானபோது பயன்படுத்தும் வகையில் அமைந்து வருகின்றன.

‘தமிழ் அகராதிக் கலை’ என்னும் இவ்வாராய்ச்சி நூலில், திரு, சுந்தர சண்முகனார் அவர்கள், அகராதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி விரிவாக ஆராய்ந்து பற்பல குறிப்புக்களை உதவியுள்ளார். அவர் தம் ஆராய்ச்சி தொல்காப்பியத்திலிருந்து தொடங்குகிறது ; சேந்தன் திவாகரம், சூடாமணி நிகண்டு, பிங்கல நிகண்டு முதலிய நிகண்டுகள் பற்றி விரிவாக அமைகிறது; பிற்-