பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498

498

பல பொருள் தரும் ஒரு சொற்களுக்குள், தெளி வாகப் பொருள் விளங்கும்படி அமைந்துள்ள பல பொருள் ஒரு சொல்லை வினை வேறுபடும் பல பொருள் ஒரு சொல்' என்னும் பெயராலும், தெளிவாகப் பொருள் விளங்கும்படி அமையாத பல பொருள் ஒரு சொல்லை 'வினைவேறுபடாப் பல பொருள் ஒரு சொல் என்னும் பெயராலும் தொல்காப்பியர் அழைத்துள்ளார். வினை வேறுபடும் பல பொருள் ஒரு சொல், இயற்கையாகவே வாக்கியத்தில் அமைந்துள்ள வினைச் சொல், இனச் சொல், சார்புச் சொல் முதலிய வற்றால் எளிதில் பொருள் விளக்கும் என்றும், வினை வேறு படாப் பல பொருள் ஒரு சொல் வினை முதலியவற் றால் எளிதில் பொருள் விளக்காமையால், அப்படி விளக்குவதற்குத் துணையாக ஏதேனும் சொல்லைச் சேர்த்துப் பேசவோ - எழுதவோ செய்ய வேண்டும் என்றும், ஒரு வாக்கியத்திலுள்ள புரியாத சொல்லை , அதே வாக்கியத்திலுள்ள புரியும் சொற்களின் துணை கொண்டு புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தொல் காப்பியர் மொழிந்துள்ளார். இக்கருத்துக்களை யெல் லாம், தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் கிளவியாக் கம் என்னும் இயலிலுள்ள,

வினைவேறு படூஉம் பல பொருள் ஒரு சொல்

வினைவேறு படாஅப் பலபொருள் ஒரு சொல் என்று ஆயிரு வகைய பல பொருள் ஒரு சொல்.

அவற்றுள் வினைவேறு படூஉம் பல பொருள் ஒரு சொல்

வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் தேறத் தோன்றும் பொருள்தெரி நிலையே."