பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508

508

வேண்டும். இதற்குத்தான் உளவியல் முறை என்று பெயராம்.

இக்கொள்கையையொட்டி ஆராய்ந்து பார்க்குங் கால், நிகண்டுகளை நெட்டுருச் செய்யும்படிக் குழந்தை களை வற்புறுத்தி வருத்துவது ஒருவகை ஒறுப்பு (தண்டனை) ஆகும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் நிகண்டுகளில் ஒன்றும் கருத்து இல்லை. ஒன்றோ டொன்று தொடர்பில்லாத வெற்று வரட்டுச் சொற் களைத் தவிர தொடர்பான செய்தியொன்றும் கூறப் படவில்லை. உளவியல் கல்வி முறையோ, குழந்தை களை எளிமையிலிருந்தே அருமைக்கு அழைத்துச் செல்லவேண்டும் - தெரிந்ததிலிருந்தே தெரியாததற்கு அழைத்துச் செல்லவேண்டும் எனப் பரிந்துரைக்கிறது. இதன்படி பார்த்தால், தனிச் சொல்லுக்கு மதிப்பில்லை. குழந்தைகள் முன்னமேயே அறிந்துவைத்துள்ள செய்திகள் அடங்கிய சொற்றொடர்களின் (வாக்கியங் களின்) வாயிலாகவே தனிச்சொற்களை அவர்கட்கு அறிமுகப்படுத்தவேண்டும். அதுதான் அவர் தம் உள்ளங்கட்கு ஏற்ற இனிய எளிய முறையாகும். 'இலக்கியங் கண்டதற்கு இலக்கணம்' என்ற முறை யில், சொற்றொடர்களிலிருந்தே தனிச்சொல்லை எடுத்து நிறுத்திப் பொருள் விளக்கம் தரவேண்டும். இந்த முறை நிகண்டுக் கல்வியில் பின்பற்றப்படவில்லை. குருட்டுப் பாடமாகவாவது நிகண்டுப் பாடல்களை அடித்துப் பிடித்து நெட்டுரு செய்து கொள்ள வேண் டும். இப்படியான ஒரு முறை சிறு மாணாக்கர்கட்குக் கடினமானதுதானே! இஃதன்றி, இன்னும் ஓர் எதிர்ப்பு நிகண்டுக் கல்விக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது.

அஃதாவது: