பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

64

64

டுள்ளன. எடுத்துக் காட்டாக,-மூன்று என்னும் எண்ணால் சுட்டப்படும் மூவறிவு என்னும் தொகைப் பெயர், தொடு அறிவு, நாக்கறிவு, மூக்கறிவு என்னும் பல பொருள்களின் கூட்டத்தைக் குறிக்கிறது. அதேபோல், தொடு அறிவு, நாக்கறிவு, மூக்கறிவு, கண்ணறிவு, செவியறிவு என்னும் பல பொருள்களின் கூட்டத்தை ஐயறிவு என்னும் தொகைப் பெயர் குறிக்கிறது. பல பொருள்களின் கூட்டத்தைக் குறிக்கும் ஒரு தொகைப் பெயராக இருத்தலின் இன்னவற்றிற்குப் பல்பொருட் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி எனப் பெயர் அளிக்கலாம்.

மேற்கூறப்பட்டுள்ள முப்பெரும் பிரிவுகளின் அடிப்படையிலேயே, கிடைத்திருக்கும் நிகண்டுகளுள் முதல் நிகண்டாகிய சேந்தன் திவாகர நிகண்டு அமைந்துள்ளது. அதைப் பின்பற்றியே மற்ற நிகண்டுகளும் அமைந்துள்ளன. இவ்விவரங்கள் திவாகர நிகண்டைப் பற்றிய தனித்தலைப்பின்கீழ்ப் பின்னர் விரிவாக விளக்கப்படும். -

ஆட்சியும் மாட்சியும்

இப்போது உலகமொழி எனப் புகழ்ந்து போற்றப்படுகிற ஆங்கில மொழியே ஆயிரம் ஆண்டுகளுக்குள்தான் உருவாகி இந்த உயர் நிலையை அடைந்துள்ளது. ஆனல் தமிழ் மொழியில் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே தொல்காப்பியம் என்னும் உயர்தனிப் பெரு நூல் தோன்றியுள்ள தென்றல், தமிழ் மொழியின் தொன்மையும் வன்மையும் சொல்லி முடியுமா? இன்னும் கேட்டால், நூல் வல்ல புலவர்கள் இவ்வாறு இயம்பியுள்ளனர்-அறிஞர்கள் அவ்வாறு