பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

75



மற்றும், நன்னூல்—களவியல் உரைகாரர்கள் காட்டியுள்ள நிகண்டு, கலைக் கோட்டுத் தண்டு என்னும் இரு நூற்கட்கும், நற்றிணையின் 382-ஆம் பாடலைப் பாடிய நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனார் என்னும் புலவர்க்கும் தொடர்பில்லையென்று எவரேனும் கட்டவிழ்த்து விடுவார்களோ என்னவோ! நன்னூல்—களவியல் உரைகளில் நிகண்டு—கலைக் கோட்டுத் தண்டு என்னும் பெயர்கள் பக்கத்தில் பக்கத்தில் இணைந்திருப்பதாலும், நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனார் என்னும் பெயரிலும் அவ்வாறே இணைப்புக் காணப்படுவதாலும் அவ்விரு நூற்களையும் இயற்றியவர் அவரேயென முடிச்சுப் போடப்பட்டுள்ளது.

நிகண்டு நூலின் காலம்

நற்றினை கடைச்சங்க நூலாகும்; நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனாரும் கடைச் சங்கப் புலவரே; எனவே, அவரியற்றிய நிகண்டு நூலும் கடைச் சங்க காலத்ததாகும். கடைச் சங்க காலம், கி.மு. ஐந்நூறிலிருந்து கி.பி. ஐந்நூறுவரை தலைக்குத் தலையொருவிதமாக ஆராய்ச்சியாளரால் பந்தாடப்படுவது தெரிந்த செய்தியே.

இனி ஆதி திவாகரம் என்னும் நிகண்டு குறித்து வருமாறு:—

ஆதி திவாகரம்

இப்பொழுது கிடைத்திருக்கும் நிகண்டுகளுள் முந்தியது ‘சேந்தன் திவாகரம்’ என்னும் நிகண்டாகும். இது, சேந்தன் என்னும் சிற்றரசனது

5