பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



இரண்டாம் பாகம்

முதல் நிகண்டு

சேந்தன் திவாகரம்

தமிழ் மொழியில் இதுவரை கிடைத்திருக்கும் நிகண்டு நூற்களுக்குள் இதனை முதலாவதாகக் குறிப்பிடலாம். சேந்தன் திவாகரம் என்பதைச் சுருக்கித் திவாகரம் என்றும் அழைப்பதுண்டு.

பெயர்க் காரணம்

இதனை இயற்றிய ஆசிரியர் திவாகரர் என்பவர். இவரை ஆதரித்து இந்நூலை இயற்றச் செய்தவன் சேந்தன் என்பவன். எனவே இது சேந்தன் திவாகரம் எனப் பெயர் பெற்றது. இந்தப் பெயர்வைப்பு ஒரு புதுமுறையே! அதாவது, இயற்றுவித்தவர் பெயரும் இயற்றியவர் பெயரும் முறையே இணைந்து திகழ்கின்றன. வன்றோ? சில நூற்கள் இயற்றியவர் பெயராலும், சில நூற்கள் ஆதரித்து இயற்றுவித்தவர்