பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

78



பெயராலும், வேறுசில கதைத்தலைவன் பெயராலும், சில சொல்லப்பட்டுள்ள பொருளின் பெயராலும், இன்னுஞ்சில இன்னோரன்ன பிற காரணங்களாலும் பெயர் பெற்றிருக்க, இந்நூலோ சேந்தன் திவாகரம் எனப் பெயர்பெற்றிருப்பது ஒரு புதுமைதானே!

அகத்தியர் எழுதிய நூலுக்கு அகத்தியம் என்பது பெயர்; தொல்காப்பியர் எழுதிய நூலுக்குத் தொல்காப்பியம் என்பது பெயர்; இளம்பூரணர் எழுதிய உரைக்கு இளம்பூரணம் என்பது பெயர்; நச்சினார்க்கினியர் எழுதிய உரைக்கு நச்சினார்க்கினியம் என்பது பெயர்; இவை போலவே, திவாகரர் எழுதிய நூலுக்குத் திவாகரம் என்பது பெயர். இது முற்றிலும் சரியே. இக்காலத்தில்கூட, இடத்தின் பெயரோ அல்லது விஞ்ஞானப் பொருளின் பெயரோ, கண்டுபிடித்தவர் அல்லது உருவாக்கியவரின் பெயரால் வழங்கப்படுவது தெரிந்ததே! பழைய நூற்கள் சிலவற்றின் பெயர்கள், இயற்றிய ஆசிரியர்களின் பெயர்களால் அழைக்கப்படுவது மிகவும் பொருத்தம் என்பதோடு மட்டுமல்லாமல், வேறொரு பெரிய நன்மையும் உண்டு என்பதை மறக்கக்கூடாது. அதாவது, பழைய தமிழ் நூற்களை எழுதிய ஆசிரியர்களைப் பற்றி ஒன்றுமே அறிய முடிவதில்லை. முத்தொள்ளாயிரம் போன்ற சிறந்த தமிழ் நூற்களைப் படைத்த ஆசிரியர்களின் பெயர்கள் கூடத் தெரியவில்லையே! இந்நிலையில், ஆசிரியரின் பெயரையே நூலுக்கு இடும் முறையால், நூலாசிரியரின் பெயரை மட்டுமாவது தெரிந்து கொள்ளும் வாய்ப்பாயினும் கிடைத்தது பிற்காலத்தார்க்கு ஒரு பெரும் பேறல்லவா?

இந்நூலுக்கு ஆசிரியர் பெயரால் திவாகரம் என்று மட்டும் பெயரிடாமல், சேந்தன் திவாகரம் என்று