பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

82



சேந்தன் வரலாறு

சேந்தனைப் பற்றி முறையான வரலாறு இல்லை. அரசர்கள்பற்றியோ—புலவர்கள்பற்றியோ—வள்ளல்கள் பற்றியோ—இன்னும் செயற்கருஞ்செயல்கள் செய்த பெரியார்கள் பற்றியோ முறையான வரலாறு எழுதி வைக்காத குறை நம் தமிழ் முன்னோரைச் சாரும் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். பொதுவாக, வரலாற்று நிகழ்ச்சிகளை அறியக் கிடைத்துள்ள சான்றுகளின் (சாதனங்களின்) வாயிலாக வரலாற்றை மூன்று வகைப்படுத்திக் கூறுவதுண்டு. அதாவது, (1) பட்டப் பகலில் நடந்த வரலாறு, (2) வைகறையில் (விடிவதற்கு முன்) பனி மூட்டத்தில் நடந்த வரலாறு, (3) அமாவாசை நள்ளிரவில் நடந்த வரலாறு எனப் பகுக்கலாம். சரித்திரம் என்னும் பெயரில் இப்போது பள்ளிக்கூடத்தில் படிக்கப்படுவது முதல்வகையைச் சேர்ந்ததாகும்—அதாவது பட்டப்பகலில் நடந்த வரலாறாகும். இதற்கு இப்பெயர் கொடுத்ததற்குக் காரணம்:— பட்டப் பகலில் நடக்கும் நிகழ்ச்சிகள் நன்றாகத் தெளிவாகத் தெரியும். அதுபோலவே, ஆண்டு, திங்கள், நாள், நாடு, ஊர், மக்களின் பெயர்கள், நிகழ்ச்சிகள் முதலியன தெளிவாகக் குறிப்பிட்டு எழுதப்பட்ட வரலாறு, ஐயத்திற்கிடமின்றி உறுதியானது. இது முதல் வகையது. அடுத்து, பழந்தமிழ் மன்னர்கள் பழந்தமிழ்ப் புலவர்கள் முதலியோர் வரலாறு—இராமர், பாண்டவர் முதலியோர் வரலாறு—இன்ன பிற வரலாறுகள் எல்லாம் இரண்டாம் வகையைச் சார்ந்தன. ஏனெனில், இவை முறையாக ஆண்டு, திங்கள், நாள் முதலியன குறிப்பிட்டு ஐயத்திற்கு இடமின்றி எழுதப்பட்டவையல்ல. புராணம், இதிகாசம், காவியம், பல