92
பதும் உண்மைதான் எனினும், இந்தச் சான்றைக் கொண்டு, புறநானூற்று அம்பர்கிழானும் திவாகரத்து அம்பற் கிழானும் ஒருவனே என முடிவு கட்டுதல் ஏற்புடைத்தாகாது. அவன் வேறு-இவன் வேறு ஒருவேளை, இவன் அவனது மரபில் வந்தவன யிருக்கலாம். இதற்குக் காரணமும் கூறமுடியும்: புறநானூற்றுப் பாடலில் சேந்தன் என்னும் பெயரின் வாடையே காணப்படவில்லை; அரசனது பெயராக அருவந்தை என்னும் சொல்தான் உள்ளது. இருவரும் ஒருவரேயானால், இவ்வளவு விளம்பரம் உள்ள சேந்தன் என்னும் பெயர் புறநானூற்றுப் பாடலில் வராமற் போக வழியில்லை. மேலும், அப்புறப்பாட்டைப் பாடியவர் கல்லாடர்; அவர் சங்க காலத்தைச் சேர்ந்த புலவர். புறநானூற்றுப் பாடல்களும் சங்க காலத்தன. பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, சங்க காலம் கி.பி. 3 அல்லது 5-ஆம் நூற்றாண்டிற்குள் முடிவடைவதாகத் தெரிகிறது. ஆனால், திவாகரரும் திவாகரச் சேந்தனும் சங்க காலத்திற்குப் பிற்பட்டவர்கள் என்று துணிவதற்கு இடமுண்டு. சில சான்றுகள் வருமாறு:
(1) திவாகரர் தமது நூலின் தொடக்கத்தில் விநாயகர் காப்புப் பாடல் பாடியுள்ளார். மற்றும், முதல் தொகுதியாகிய தெய்வப் பெயர்த் தொகுதியில் விநாயகருக்கு உரிய பெயர்களை,
- "ஒற்றைக் கொம்பன், விநாயகன், ஐங்கரன்,
- வெற்றி யானை முகவன், கணபதி,
- பாசாங்குச தான், ஆகு வாகனனே.”
என்னும் பாடலில் கூறியுள்ளார். ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படிப் பார்த்தால், பழந்தமிழகத்தில் விநாயகர்