இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
122 தமிழ் அங்காடி
பகல் என்பதற்கு ஞாயிறு என்னும் பொருள் உள்ளதை மணிமேகலையில் உள்ள
(4:92)
என்னும் பாடல் பகுதியால் அறியலாம். எல்லிநாதன், எல்லி நாயகன் என்றால் திங்கள் இங்கே சூழ்நிலையைக் கொண்டும் ஆகுபெயராகவும் எல்லி என்பதற்குத் திங்கள் எனப் பொருள் கொள்ளல் வேண்டும். சூழ்நிலை என்பது, ஒரே நேரத்தில் இரண்டும் தெரிவதுதான். பகல் = ஞாயிறு எனில் மற்றொன்று திங்களாகும்.
ஒரே நேரத்தில் (மாலையில்) கிழக்கே திங்களையும் மேற்கே ஞாயிறையும் பார்க்க முடியும் என்பதற்கு, இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் சில இலக்கிய ஆட்சிகள் காண்போம்.
சிலப்பதிகாரத்தில்:-
- "வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
- ஓங்குயர் மலயத்து உச்சி மீமிசை
- விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
- இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து"
(11:41 – 44)
பரிபாடலில்:-
"பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த இருவேறு மண்டிலத்து இலக்கம் போல நேமியும் வளையும் ஏந்திய கையால்"
(13:7 - 9)
(இருவேறு மண்டிலம் = ஞாயிறும் திங்களுமாம்).
மணிமேகலையில்:-
- "புலவரை இறந்த புகார் எனும் பூங்கொடி (5:109)
- குணதிசை மருங்கில் நாள் முதிர் மதியமும்