இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுந்தர சண்முகனார் 159
- அன்னைக் குரிய அரும்பெரு மகுடம்
- என்னென் னவென இயம்பிடு கென்றாள்.
- தலைவன் கூறல்:
- அன்னையின் அருமை பெருமை அனைத்தும்
- மன்னிய மகுடமாம் மகிழ்வுடன் கேள் நீ;
- கடல்கொள் குமரிக் கண்டமே மக்கள்
- முதலில் முகிழ்த்த இடமென்ப தாய்வுரை.
- ஞாயிற்றின் பிரிந்த நமதுபூ வுலகில்
- முதலில் குளிர்ந்தது முத்தமிழ்க் குமரியே!
- ‘நெருப்புக் குளிர்ந்து நெடும்பாறை யானது;
- பாறை தேய்ந்து பலமணல் உதிர்த்தது’
- என்ப திந்த நூற் றாண்டின் ஆய்வுரை.
- பாறைக் காலத்தே பைந்தமிழ் மக்கள்
- வீறுடன் தோன்றிய வியத்தகு செய்தியை
- கி.பி. எட்டாம் நூற்றாண் டிலேயே
- ஐயனா ரிதனார் எனுந்தமி ழறிஞர்
- ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
- முன்தோன்றி மூத்த குடி' என மொழிந்தார்.
- முதலில் தோன்றிய மூத்த தமிழரின்
- மொழியே உலகின் மூத்த முதல்மொழி.
- குமரிநா கரிகம் கொடுங்கடல் கொண்டது. அதாஅன்று,
- மண்ணுக் குள்ளே மறைந்த தொன்மைச்
- சிந்துநா கரிகமும் செந்தமிழ் இனத்தவர்
- சிந்துநா கரிகச் செல்வமே யன்றோ?
- அதாஅன்று,
- ஒருசொல் பல்பொருள் உணர்த்தலும் தமிழின்
- பொருவில் தொன்மையைப் புலனாக் கும்மே!
- மாமன் எனுமுறை மகவிடங் கூறின்
- மாமனென் றழைக்கும் மற்றை யோரையும்.
- ஆமொரு பெயரை அற்றைத் தமிழர்