பக்கம்:தமிழ் அங்காடி.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  241



2.5 மற்ற நூல்கள்

அடுத்து, ஐந்திலக்கணங்களையும் அமைத்தோ அல்லது அவற்றுள் ஒன்றிரண்டை மட்டும் அமைத்தோ இயற்றப் பெற்ற நூல்களின் பெயர்களையும் அவற்றின் ஆசிரியர் களின் பெயர்களையும் பொதுவாகக் காண்பாம்:

இறையனார் இயற்றிய இறையனார் அகப்பொருள் என்னும் இறையனார் களவியல்,

நாற்கவிராச நம்பியின் நம்பி அகப்பொருள்.

ஐயனாரிதனாரின் புறப்பொருள் வெண்பாமாலை.

பன்னிருவர் இயற்றிய பன்னிரு படலம்.

அமித சாகரர் இயற்றிய யாப்பருங்கலம் - யாப்பருங் கலக்காரிகை என்னும் நூல்கள்.

தண்டியாசிரியரின் தண்டியலங்காரம்.

திருக்குருகைப்பெருமாள் கவிராயரின் மாறனலங்காரம்-மாறன் பாப்பாவினம்.

விசாகப் பெருமாள் ஐயரின் ஐந்திலக்கண நூல் - அணியிலக்கண நூல்.

புத்த மித்திரரின் வீர சோழியம்.

வைத்திய நாத தேசிகரின் இலக்கண விளக்கம்.

சிவஞான முனிவரின் இலக்கண விளக்கச் சூறாவளி.

முத்து வீர நாவலரின் முத்து வீரியம்.

வீரமாமுனிவரின் தொன்னுால் விளக்கம், இலத்தின் மொழியில் எழுதிய கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணச் சுருக்கம், செந்தமிழ் இலக்கணத் திறவுகோல்.

குணவீர பண்டிதரின் சின்னூல் என்னும் நேமிநாதம்.

ஈசான தேசிகரின் இலக்கணக் கொத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/243&oldid=1204430" இலிருந்து மீள்விக்கப்பட்டது