பக்கம்:தமிழ் அங்காடி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42  தமிழ் அங்காடி


    "உரைப்பார் உரைப்பவை எல்லாம்
        இரப்பார்க்கு ஒன்று
    ஈவார்மேல் நிற்கும் புகழ்" (232)

என்றார் வள்ளுவர். ஈவார்மேல் புகழ் நிற்கும் என்றால், ஈயாதார்மேல் இகழ் நிற்கும் என்பது தானே போதரும்.

"பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் கேடு கெட்டவர்கள்" என்று இவர்களைச் சாடுகிறார் ஒளவையார். (நல்வழி - 22)

தானும் துய்க்காமல் பிறர்க்கும் கொடாமல் பொருளைக்காத்து வைத்தவனை நோக்கி அப்பொருளே எள்ளி நகையாடுமாம்; அருள் என்னும் பண்பும் அங்ஙனமே செய்யுமாம் - என்று நாலடியார் நவில்கிறது.

      "துய்த்துக் கழியான் துறவோர்க்கு ஒன்று ஈகான்
      வைத்துக் கழியும் மடவோனை - வைத்த
      பொருளும் அவனை நகுமே உலகத்து
      அருளும் அவனை நகும்” (273)

என்பது பாடல். இப்படியான ஒரு கருத்தைக் கம்பர் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தம் பாடலில் மெல்லப் புகுத்தியுள்ளார்.

தோள் கண்டாள்

சூர்ப்பணகை இராமனுடைய தோள்களில் தன் கண்களைப் பதித்தாளாம்; பிற்பாடு அந்தக் கண்களை அவனுடைய தோள்களிலிருந்து பெயர்த்து எடுக்க முடியவில்லையாம்.

        "தோன்றல் தன் சுடர் மணித் தோளில் நாட்டங்கள்
        ஊன்றினள் பறிக்க ஊர் ஊற்றம் பெற்றிலள்”

நாட்டங்கள் = கண்கள். பறித்தல் = பெயர்த்து மீட்டல். ஊற்றம் = வலிமை. பார்த்த கண் வாங்காமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/44&oldid=1204523" இலிருந்து மீள்விக்கப்பட்டது