பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 அரசன் என்றும், லோக என்னும் ஸ்மஸ்கிருத மொழியை உலகு என்றும் மாற்றியிருக்கின்றனர் : பூரீ என்னும் வடமொழிக்குப் பதிலாக திரு என்னும் பதத்தை உபயோகித்திருக்கின்றனர். ரீரங்கம் என்பது திருவரங்கம்; என்ருயது, மஹார் என்பதும் மா என்ருயது. இன்னும் இதற்கு சில உதாரணங்கள் : சமஸ்கிருதம் தமிழ் சில்மிஷம் சில்மிஷம் பூர்வாஷாடம் பூராடம் விஞ்ஞாபனம் விண்ணப்பம் மார்க்க கிரஹம் மார்க்கழி ஹந்த அந்தோ வடமொழியினின்றும் தமிழ் மொழிக்கு வந்த பதங்கள் முக்கிய மாக தத்வசாஸ்திரம் (Philosophy) ஜோதிஷ சாஸ்திரம் முதலிய சாஸ்திரங்களி லுபயோகிக்கப்படும் மொழிகளும், மத சம்பந்தமான மொழிகளும் சில்பம் முதலிய கலைகளிலுபயோகிக்கப்படும் பதங் களுமாம், என டாக்டர் கால்ட்வெல் அபிப்பிராயப்படுகிருர். சம்ஸ்கிருத பாஷையிலிருந்து மத சம்பந்தமாக தமிழில் நுழைந்த பதங்களுக்கு உதாரணமாக பூஜை, ஆராதனம், நிவேதனம், அபி ஷேகம், பலி, புரோஹிதர், அர்ச்சகர், விக்ரஹம் முதலியவற்றைக் கூறலாம். தத்வ சரஸ்திர மொழிகளுக்கு உதாரணமாக : ஆத்மா, அத் வைதம், துவைதம், திரோபலம், மாயை, மோட்சம் முதலியவற்றைக் கூறலாம். ஜோதிஷ சாஸ்திரத்தின் மூலமாக தமிழுக்கு வந்த பதங்களுக்கு உதாரணமாக பிரஹஸ்பதி, சனி, புதன், மண்டலம், கிரஹணம், ராகு, கேது, ராசி, கிரஹம், தியாஜ்யம், நட்சத்திரம் தூமகேது முதலிய வற்றைக் கூறலாம். வடமொழியில் வழங்கிய, கலைகளின் மூலமாக தமிழுக்கு வந்த மொழிகளுக்கு உதாரணமாக நாடகம் (?) அபிநயம், சித்திரம், சில் பம், கிருத்தம், நவரசம், ஹஸ்தம் முதலியவற்றைக் கூறலாம். தமிழ் நாட்டில் கிடைக்காது வட இந்தியாவிலிருந்து, தமிழர்கள் அறிந்த மிருகங்கள் சிங்கம், ஒட்டகம் முதலியன ஆகவே அவை