பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 கிருேம்; இவ்வழக்கத்துடன் இப்பதமும் வழக்கற்று போய் விட்டது. அட்டப் பல்லக்கு என்ருல் சாதாரணமாக தமிழ் பண்டிதர்களுக் குத் தவிர, மற்றவர்களுக்கு அர்த்தமாகாது. இதன் பொருள் குறுக் காகக் கொண்டுபோகும்படி யமைத்த சிவிகை என்பதாம். பல்லக்கு என்பது தமிழ் மொழி. சிவிகை சமஸ்கிருத மொழி (சிபிகா) அட்டப் பல்லக்கு என்பது, புவி அரசர்கள், கவி அரசர்கள் முதலிய பெரி யோர், மரியாதையாக உபயோகிக்கும் பல்லக்காம். பல்லக்கு சவா ரியே தமிழ்நாட்டில் வர வர குறைந்துகொண்டு வரும்பொழுது, அட் டப் பல்லக்கு, எனும் மொழி மங்கியது ஆச்சரியமற்று. கழு மரம், கழுவேற்றுதல் என்னும் மொழிகள் திருஞான சம்பந்த ஸ்வாமிகள் காலத்தில் உபயோகிக்கப்பட்டுவந்தனர். பிறகு மகம்மதிய அரசர்கள் காலத்திலும் அப்பழக்கம் சிறிது இருந்தமையால், அப்பதங்கள் உபயோகிக்கப்பட்டு வந்தன. ஆங்கிலேய அரசாட்சி தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு, இக்கோரமான தண்டனை தவிர்க்கப்பட்டு, அப்பதங்களுக்கு உபயோகமே இல்லாமற் போயிற்று. தொழுக்கட்டை என்கிற பதத்தின் அர்த்தம் சில கிராமவாசி களுக்குத்தான் தெரியும், பட்டணங்களில் குற்றஞ் செய்வோரை தொழுக்கட்டையிலிடுகிற வழக்கம் அற்றுப் போய்விட்டது; நாளடை வில் இப்பழக்கம் முற்றிலும் அற்று, அப்பதமும் வழக்கினின்றும் நழுகிவிடும் என்பதற்கு ஐயமின்று, ஐம்பது வருடங்களுக்கு முன்பு பாடசாலைகளில் சரியாகப் படிக் காத பிள்ளைகளுக்கு “ கோதண்டம் ' என்றும் ஒர்சிட்சை விதிப்ப துண்டு; தற்காலம் அச்சிட்சையுடன் அப்பதமும் அற்றுப் போய் விட்டது. - தற்காலம் நமது அனுபவத்தில் மறைந்துகொண்டு வருகிற இரண்டொரு தமிழ்பதங்களைக் கவனிப்போம். தீவட்டி தீவர்தீ என்பது சிலவருடங்களுக்குமுன், தமிழ் நாடெங்கும் உபயோகிக்கப்பட்டதாம்; வாஷிங்டன் விளக்கு, கிட்சன் விளக்கு, பெட்ரோமாக்ஸ் விளக்கு, மின்சார விளக்கு (Electric light) முதலியன நமது நாட்டில் வர ஆரம்பித்த பிறகு, கோயில் உற்சவங்களிலும் தீவட்டிகளை உபயோகிப்