ப, மாணிக்கவேலு அம்மாள்
பிறந்து வளர்ந்த கதை
-
பாக்கம் என்பது பக்கம் என்னும் சொல்லிலிருந்து பிறந்திருக்க வேணும். சிறிய ஊரின் பக்கத்திலுள்ள இடம் என்றும்;உதாரணமாக புரை சைபாக்கம்,காவிரிப்பாக்கம்,நுங்கம்பாக்கம்,காட்டுப்பாக்கம் முதலியவற்றைக் காண்க.
பள்ளி என்பது பள்ளத்தாக்கிலுள்ள சிற்றுார் என்று சிலர் அபிப் பிராயப்படுகின்றனர் ; உதாரணமாக, காட்டுப்பள்ளி, செம்பொன் பள்ளி, திருச்சிராப்பள்ளி, அகத்தியான்பள்ளி,முதலியவற்றைக் கூறலாம் : இதே பதம் தெலுங்கில் பல்லே என்று மாறியிருக்கிறது. கன்னடத்தில் ஹல்லி என்றாயது. -
பேடு என்பது சிறிய ஊர் என்று சொல்லப்பட்டிருக்கிறது அமரம்பேடு, சூளும்பேடு முதலியவற்றைக் காண்க. - பேட்டை என்பது பேடு என்பதினின்றும் பிறந்திருக்கலாம். உதாரணமாக சிந்தாதிரிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சேத்துப்பேட்டை தண்டையார்பேட்டை முதலியவற்றைக் காண்க. ஆதிகாலத்தில் இழி குலத்தவர் வசித்த இடங்களுக்கு இப்பெயர் கொடுக்கப்பட் டிருக்கலாம். - -